Connect with us

Cinema News

போதையைக் கையாண்ட டைரக்ஷன் டீம்.. ரஜினி விட்ட டோஸ்ல என்ன ஆனாங்கன்னு பாருங்க!

நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா பற்றிய பேச்சுதான் வலைதளங்கள் எங்கும் அடிபடுகிறது. போதைப்பொருள் தான் எல்லாத்துக்கும் காரணம். இது ஒரு புறம் இருக்க சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தே ஒரு காலத்தில் சிகரெட், மதுப்பழக்கத்துக்கு அடிமையாகத் தான் இருந்துள்ளார். அதன்பிறகு அவர் எப்படியோ அந்தப் பழக்கங்களில் இருந்து மீண்டுவிட்டார்.

அப்போது அவர் சொன்னது இதுதான். பின்விளைவுகள் தெரியாம நான் பயன்படுத்தியதால் இன்னைக்கு எமன் வாயில் இருந்து மீண்டு வந்து உங்க முன்னாடி நிக்கிறேன். தயவு செய்து யாரும் இதுமாதிரி போதைப் பொருள்களைப் பயன்படுத்தாதீங்க. ரஜினி எல்லாத்தையும் அனுபவிச்சிட்டு சொல்றாருன்னு சொல்வாங்க. என் என் இடத்துல மற்றவங்க யாராவது இருந்தா காணாமப் போயிருப்பாங்க. உங்களுடைய பிரார்த்தனைதான் நான் இப்பவும் சினிமாவில் நிற்கக் காரணம் என்கிறார் ரஜினி.

ஒரு படப்பிடிப்பின்போது ரஜினி உட்கார்ந்து கொண்டு இருக்கிறார். ஒரு வாடை வந்து கொண்டே இருந்ததாம். மேக்கப்மேனையும், அசிஸ்டண்டையும் கூப்பிட்டு ரஜினி யாராவது ஏதாவது பிடிக்கிறாங்களான்னு கேட்டுருக்காங்க. அப்புறம் அது டைரக்ஷன் டீம்ல இருந்து வந்ததாம். ரஜினியே நேரடியா கூப்பிட்டு ‘நான் செட்ல இருக்குற வரைக்கும் யாராவது அடிச்சீங்கன்னா தொலைச்சிடுவேன்.

தூர ஓடிப்போயிடுங்க’ன்னு எச்சரித்தாராம். அந்த டீம் வெட்கப்பட்டு கூனிக்குறுகி அதை நிறுத்தினாங்களாம். இதே மாதிரி 25 வருஷத்துக்கு முன்னாடின்னா ரஜினி சொல்லிருக்க மாட்டாராம். பட்டு அனுபவிச்சி வந்ததாலதான் சொன்னாராம். எம்ஜிஆரு ஒரு படத்துல மதுவைத் தொட்டுருவாரு. ‘தைரியமாகச் சொல்லி மனிதன் தானா’ன்னு ஒரு பாட்டு வரும். தொட்டதுக்காக அழுவார்.

இதெல்லாம் திருந்திருவாங்கன்னு தான் படத்தில் அப்படி எடுத்தாங்களாம். சுருளிராஜன் குடிச்சி குடிச்சி 42 வயசுல இறந்து போனார். மிகச்சிறந்த நடிகர். அப்பேர்ப்பட்ட அவர் இறந்ததுக்குக் காரணம் இந்தக் குடிப்பழக்கம்தான். இன்னைக்கு ஸ்ரீகாந்த், கிருஷ்ணா போ..தைப்பொருளைப் பயன்படுத்திருக்காங்க.

அதையும்தாண்டி எவ்வளவு சமூகப்பொறுப்புகள் இருக்கு? பெரிய பெரிய இயக்குனர்கள் எல்லாம் இப்படிப் போதையை வைத்து படம் எடுக்கலாமா? விக்ரம் படத்தில் விஜய்சேதுபதி மாதிரி ஒரு பையன் பபிள்கம்மை வாயில திணித்து வச்சிருக்கான். இன்னொரு நடிகர் மாதிரி ஒருவன் கையில குளுக்கோஸ் பவுடரைக் கொட்டி முகர்ந்து பார்த்துள்ளான்.

ரொம்ப ட்ரீட்மெண்ட் கொடுத்த பிறகுதான் அவனைக் காப்பாத்துனாங்களாம். சமூக பொறுப்புள்ள இயக்குனர்கள் என்றால் இப்படி எல்லாம் படம் எடுப்பாங்களா? மேற்கண்ட தகவலை பிரபல மூத்த பத்திரிகையாளர் செய்யாறு பாலு தெரிவித்துள்ளார்.

author avatar
sankaran v
பி.ஏ பட்டதாரியான இவர் ஊடகத் துறையில் 13 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, ஆன்மிகம்,லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Continue Reading

More in Cinema News

To Top