நாயகன்தான் காரணம்!.. தக் லைப் படம் ஓடாததுக்கு புது காரணம் சொல்லும் மணிரத்னம்!…

Published on: August 8, 2025
---Advertisement---

Thug life: கமலும், மணிரத்னமும் இணைந்து உருவான நாயகன் திரைப்படம் 1987ம் வருடம் வெளியானது. அது நடந்து 38 வருடங்களுக்கு பின் இருவரும் மீண்டும் தக் லைப் படத்திற்காக இணைந்தனர். இருவரும் இணைந்ததால் ரசிகர்களிடம் பெரிய எதிர்பார்ப்பு எழுந்தது. நாயகன் போன்ற ஒரு படத்தை இருவரும் மீண்டும் கொடுப்பார்கள் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.

இருவரின் இணையும் படத்திற்கு தக் லைப் என பெயர் வைக்கப்பட்டது. அப்படி என்னவென்றே பலருக்கும் தெரியவில்லை. அதன்பின் சிம்புவும் இந்த படத்தில் நடிப்பதாக அறிவித்து ஹைப் ஏற்றினார்கள். சிம்புவும் கமலும் இணைந்து நடிப்பது ரசிகர்களுக்கு வித்தியாசமான அனுபவமாக இருக்கும் என கணிக்கப்பட்டது. அதோடு, இந்த படத்தில் சிம்பு, அபிராமி, நாசர், ஜோஜூ ஜார்ஜ், அசோக் செல்வன் போன்றவர்களும் நடித்தனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார்.

போஸ்டர்களை பார்த்த பின் இது நாயகன் போல ஒரு பக்கா கேங்ஸ்டர் படம் என்றே ரசிகர்களுக்கு தோன்றியது. மேலும் இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் பேசிய கமல் ‘நாயகனை விட ஒரு சிறந்த படத்தை கொடுக்க முயற்சி செய்திருக்கிறோம் என பில்டப் ஏற்றினார். இந்த படத்திற்கு பெரிய அளவில் புரமோஷனும் செய்தார்கள்.

ஆனால், படம் வெளியான பின் ரசிகர்களை திருப்திப்படுத்தவில்லை. ஏனெனில் கமலுக்கு திரிஷாவுடன் கள்ளக்காதல், கமலை கொன்றுவிட்டு திரிஷாவுடன் சிம்புவுக்கு கள்ளக்காதல் என படமோ வேறு பாதையில் பயணித்தது. எனவே, படம் ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை. எனவே, படத்தை கடுமையாக ட்ரோல் செய்தார்கள். இதுவரை மீம்ஸ்க்கு வராத மணிரத்னம் கூட தக்லைப் படத்திற்கு பின் மீம்ஸ்க்கு வந்துவிட்டார்.

தக் லைப் படம் ரசிகர்களுக்கு பிடிக்காமல் போய்விட்டதால் படத்தின் வசூலும் கடுமையாக பாதித்தது. இந்த படத்தால் கமலுக்கு பல கோடிகள் நஷ்டம் எனவும் செய்திகள் வெளியானது. இந்நிலையில், ஒரு ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு பேட்டி கொடுத்த மணிரத்னம் தக் லைப் படம் பற்றி பேசியிருக்கிறார்.

எங்கள் இருவரிடமும் இன்னொரு நாயகனை எதிர்பார்த்தவர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இன்னொரு நாயகனை எடுக்கும் என்ணமே எங்களிடம் இல்லை. முழுக்க முழுக்க வித்தியாசமன ஒன்றை கொடுக்க நினைத்தோம். அதிக எதிர்பார்ப்பு காரணமாக நாங்கள் எடுத்த படத்திற்கு முற்றிலும் வேறுபட்ட ஒன்றை ரசிகர்கள் எதிபார்த்துள்ளனர்’ என சொல்லியிருக்கிறார்.

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment