Connect with us

Cinema News

கொடுத்த சத்தியத்தை மீற முடியல… அதான் மியூசிக்கை விட்டுட்டேன்… சீக்ரெட் சொன்ன விஜய் ஆண்டனி

விஜய் ஆண்டனி முதலில் ஒரு மியூசிக் டைரக்டராகத் தான் சினிமாவில் என்டர் ஆனார். ஆனால் அதன்பிறகு நடிக்க வந்துவிட்டார்;. விஜய் ஆண்டனியின் படங்கள் பெரும்பாலும் நெகடிவ் டைட்டிலாகவே இருந்தன. கொலைகாரன், பிச்சைக்காரன், நான், யமன், திமிரு புடிச்சவன், சைத்தான் என பல படங்களை உதாரணமாகச் சொல்லலாம். இவர் நடித்த முதல் படம் நான். 2012ல் இந்தப் படத்தில் நடிகராக அறிமுகம் ஆனார்.

தமிழ்த்திரை உலகில் சகலகலா வல்லவர்களாக ஒரு சில நடிகர்கள் உள்ளனர். கமல், டி.ராஜேந்தர், பாக்கியராஜ், சிம்புவைத் தொடர்ந்து இசை அமைப்பாளரும், நடிகருமான விஜய் ஆண்டனியையும் சேர்த்துக் கொள்ளலாம்.

பாடகர், பாடல் ஆசிரியர், இசை அமைப்பாளர், சவுண்டு என்ஜினீயர், தயாரிப்பாளர், இயக்குனர் என பன்முகத்திறன் கொண்டவர் நடிகர் விஜய் ஆண்டனி. இவர் நடிப்பில் பிச்சைக்காரன் படம் பட்டி தொட்டி எங்கும் பட்டையைக் கிளப்பியது. எதற்காக இசை அமைப்பதை விட்டுவிட்டு நடிகர் ஆனார் என்று அவரே சொல்றாரு பாருங்க.

நான் முதல் முதலில் வேலாயுதம் திரைப்படத்துக்கு தான் மியூசிக் டைரக்டராக 1 கோடி சம்பளம் வாங்கினேன். அதுக்கு முன்னாடி எல்லாம் கம்மிதான். வேலாயுதம், வேட்டைக்காரன், வெடி, உத்தம புத்திரன் போன்ற நாலு பெரிய படங்கள் பண்ணும்போது தான் நான் இன்டஸ்ட்ரில இருந்து வெளியே வந்தேன்.

ஏன்னா வேட்டைக்காரனுக்கு முன்னாடியே என்னை ரொம்ப சின்னதா போயிட்டு இருக்கு. சில விஷயங்கள் நடக்கவில்லையே என்று நினைத்து ரெண்டு வருஷம் கழித்து கண்டிப்பாக நடிக்க போகிறேன் என்று சத்தியம் கொடுத்து விட்டேன். அதுக்கு அப்புறம் தான் எல்லாமே ஹிட் ஆச்சு. ஆனா கொடுத்த சத்தியத்தை மீற முடியாததால, நடிக்க வந்துட்டேன். அப்படியே மியூசிக்கை விட்டுட்டு வந்தேன் என்கிறார் விஜய் ஆண்டனி.

author avatar
sankaran v
பி.ஏ பட்டதாரியான இவர் ஊடகத் துறையில் 13 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, ஆன்மிகம்,லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Continue Reading

More in Cinema News

To Top