Connect with us

latest news

Siragadikka aasai: நீத்துவை மனோஜிற்கு கல்யாணம் செய்ய பிளான் போட்ட விஜயா.. என்ன செய்ய போகிறார் ரோகிணி?

Siragadikka aasai: விஜய் தொலைக்காட்சியின் பிரபல சீரியலான சிறகடிக்க ஆசை தொடரில் நடக்க இருக்கும் எபிசோட்டின் தொகுப்புகள்.

மனோஜை வெறுப்பேற்ற ரோகிணி மகேஷ் என்ற பெயரில் பேசிவிட்டு வந்து படுக்க அவர் போனை எடுத்து அந்த நம்பரை சேவ் செய்து வைத்து கொள்கிறார் மனோஜ். இதை பார்க்கும் ரோகிணி நமட்டு சிரிப்புடன் படுத்துக்கொள்கிறார்.

மறுநாள் காலை வீட்டுக்கு வருகிறார் நீத்து. அவர் குடும்பத்தினரிடம் பேசிவிட்டு ஸ்ருதி ரவிக்காக பேசியதை பின்னர் நினைத்து பார்த்தேன். அதுதான் எனக்கு சரியெனப்பட்டது. இதனால் ரவியை என்னுடைய வொர்க்கிங் பார்டனராக சேர்த்து கொள்ள நினைப்பதாக கூறுகிறார்.

இதை கேட்கும் எல்லாரும் சந்தோஷப்படுகின்றனர். ஸ்ருதி அவங்க ஹஸ்பெண்ட்டுக்காக பேசினது தான் சரியென தோன்றியதை சொல்ல முத்துவும் அப்படி தான் புருஷனை விட்டுக்கொடுக்காம பேசணும் என்கிறார். வேலை செய்ய வச்சிட்டு அவனை ஏமாத்திட மாட்டீங்களே என்கிறார் மனோஜ்.

நீங்க கவலையே பட வேண்டாம். அதுக்கான டாக்குமெண்ட்டை கொண்டு வந்து இருக்கேன். நீங்க படிச்சி பாத்துட்டு சைன் போடுங்க என்கிறார். ரவியை உள்ளே அழைத்து வரும் ஸ்ருதி, பாத்தியா நான் சொன்னதால் தான் இது நடந்து இருக்கு. இப்போ நீ சைன் போடு நம்ம ரெஸ்டாரெண்ட் தொடங்குற வரை என்கிறார்.

இதற்கிடையில் விஜயா நீத்துவை கேள்வி கேட்டு கொண்டு இருக்கிறார். இன்னொரு கடை தொடங்க பெரிய செலவு ஆகுமே எனக் கேட்க அதை என்னுடைய டாடி தருவாரு என்கிறார். ஏன் மனோஜ் எவ்வளவு ஆகும் எனக் கேட்க 2 கோடி ஆகும் என்கிறார்.

நீத்து இல்ல இல்ல 20 கோடி வரை ஆகும் என கூற விஜயா திட்டம் வேறு மாதிரியாக போகிறது. இந்த பார்லரை கழட்டிவிட்டு நீத்துவை கட்டி வைக்க அவர்கள் மணக்கோலத்தில் இருப்பது போல யோசிக்கிறார். அப்போ வரும் ஸ்ருதி அந்த டீலுக்கு ஓகே சொல்கிறார்.

நீத்துவும் கையெழுத்து வாங்கிக்கொண்டு கிளம்ப அடிக்கடி வீட்டுக்கு வாம்மா, உனக்கு நிறைய படிச்சு பிசினஸ் செய்ற பையன் கிடைப்பான் எனச் சொல்லி அனுப்புகிறார். ரவியை அழைக்கும் முத்து இதில் உனக்கு சம்மதமா எனக் கேட்க இப்போ எதுவுமே என்னுடைய கையில் இல்லையே என்கிறார்.

சீதா வீட்டில் சத்யா அவர் அம்மாவிடம் சீதாவின் காதல் விவகாரம் குறித்து பேச அவர் மாப்பிள்ளைக்கு பிடிக்காம எதையும் தான் செய்யவே முடியாது என்கிறார். அந்த நேரத்தில் மீனா வர சீதாவை ஏன் இப்படி போய் அருணிடம் பேசிட்டு வந்த எனத் திட்டுகிறார்.

அருண் அம்மா வர சீதா ரூமிற்குள் சென்று விடுகிறார். மன்னிச்சிக்கோங்க அம்மா. அவ கவலையில தான் இருக்காள் என்கிறார். அருணும் அப்படிதான் இருக்கான். உன் புருஷனிடம் பேசி இந்த கல்யாணத்துக்கு சம்மதம் வாங்க முடியாதம்மா எனக் கேட்கிறார் அருணின் அம்மா.

author avatar
ராம் சுதன்
Continue Reading

More in latest news

To Top