Cinema News
இந்தியன் 3 படத்தால் அன்பறிவுக்கு சிக்கல்..! பிரபலம் சொல்லும் லேட்டஸ்ட் அப்டேட்!
இந்தியன் 3 படத்துக்கு ரஜினி நேராக ஷங்கரிடமே போய் பேசி சுமூகமான தீர்வைக் கொடுத்து விட்டதாகச் சொல்லப்பட்டது. அதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவும், கமல் தனது எம்பி பதவியைத் தொடங்குவதை அறிவிக்கும் வகையிலும் ரஜினியைப் போய் சந்தித்தார். தொடர்ந்து இந்தியன் படம் டேக் ஆப் ஆகிறது என்றார்கள். இதுகுறித்து பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் என்ன சொல்றாருன்னு பாருங்க.
இந்த வருட இறுதிக்குள் இந்தியன் 3 ரிலீஸ் ஆவதற்கான எல்லா வாய்ப்புகளும் இருக்கு. இந்தியன் 3ல் 80 பர்சன்ட் எடுத்தாச்சு. 20 பர்சன்ட் இன்னும் எடுக்க வேண்டியது பாக்கி இருக்குன்னு சொல்றாங்க. இந்தியன் 2 மட்டும் வராம இருந்ததுன்னா இந்தியன் 3 யோட ரேஞ்சே வேற.
படத்தைப் பார்த்தவங்க எல்லாருமே எக்ஸலன்ட்டா இருக்குறதா சொல்றாங்க. இது இந்தியன் முதல் பாகத்துக்கு ஈக்குவலாக இருப்பதாக சொல்றாங்க. அதனால தான் இந்தப் படத்தை எப்படியாவது வெளியே கொண்டு வந்துடணும்னு நினைக்கிறாங்க.
இந்தியன் 3 படத்தில் 20 பர்சன்ட் சூட்டிங்கை எடுப்பதற்கான ஏற்பாடுகள் எல்லாம் நடந்து கொண்டு தான் இருக்கிறதாம். இந்தப் படம் ரிலீஸ் ஆகும் பட்சத்தில் இந்தியன் 2 படத்தால் ஏற்பட்ட கரையை நிச்சயம் இந்தியன் 3 துடைக்கும் என்கிறார்கள். அது மட்டும் இல்லாமல் இந்தப் படம் ஒரு புதிய சாதனையைப் படைக்கும் என்றும் சொல்கிறார்கள்.
வீரதீரசூரன் பட இயக்குனர் எஸ்.யு.அருண்குமாருடன் இணைந்து கமல் ஒரு புதிய படத்தில் நடிப்பதாக சொல்லப்பட்டது. இந்தியன் 3 படப்பிடிப்பு ஆரம்பித்தால் அந்தப் படத்தின் படப்பிடிப்பு தள்ளிப்போகும் என்று தெரிகிறது.

இந்தியன் 3ல் தான் முதலில் கவனம் செலுத்துவார்கள் என்று தெரிகிறது. எப்படிப் பார்த்தாலும் செப்டம்பருக்குள் இந்தியன் 3 முடித்தாலும் அக்டோபர்ல தான் அருண்குமார் படத்தின் படப்பிடிப்பு தொடங்கும். இப்போ அன்பறிவு படத்துக்குத் தான் சிக்கல். எப்படியும் அருண்குமாரின் படப்பிடிப்பு ஜனவரி 2026 வரை நடக்கும். அடுத்த வருஷம் தேர்தல் என்பதால் அன்பறிவு படம் தள்ளிப்போகும் என்று நினைக்கிறேன் என்கிறார் சித்ரா லட்சுமணன்.