வசூலில் அதகளம் செய்யும் அகாண்டா 2!.. 3 நாளில் இவ்வளவு கோடி வசூலா?!…

Published on: December 15, 2025
akhanda2
---Advertisement---

தெலுங்கு சினிமா உலகில் முக்கிய நடிகராக இருப்பவர் பாலகிருஷ்ணா. இவரை தெலுங்கு சினிமா ரசிகர்கள் பாலையா என அழைக்கிறார்கள். இவரின் நடிப்பில் போயாபட்டி ஸ்ரீனு இயக்கி 2001ம் வருடம் வெளியான திரைப்படம் அகாண்டா. வில்லன்களை துவம்சம் செய்யும் அகோரியாக இந்த படத்தில் அசத்தியிருந்தார் பாலையா.

இந்த படம் இந்தியா மட்டுமல்லாமல் உலகெங்கிலும் உள்ள பாலையா ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்று பாக்ஸ் ஆபிஸில் ஹிட் அடித்தது. அதனைத் தொடர்ந்து தற்போது அகண்டா 2 வெளியாகியிருக்கிறது. கடந்த வெள்ளிக்கிழமை இப்படம் உலகமெங்கும் வெளியானது.

இந்த படத்தையும் போயாபட்டி சீனுவே இயக்கியிருந்தார். இந்த படத்தில் ஹர்சாலி மல்கோத்ரா, சம்யுக்தா உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். மேலும் ஆதி இந்த படத்தில் வில்லனாக நடித்திருந்தார். தமன் இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார். முதல் பாகத்தை போலவே இந்த படத்திலும் அதிக பன்சு வசனங்கள் மற்றும் வில்லன்களை பாலையா துவம்சம் செய்யும் காட்சிகள் இடம் பெற்றிருந்தது. சில காட்சிகளை இமயமலையில் எடுத்திருந்தார்கள்.

இந்நிலையில் படம் வெளியாகி மூன்று நாட்கள் ஆகிவிட்ட நிலையில் இப்படம் 60 கோடி வசூலை தாண்டியிருக்கிறது. மூன்றாவது நாளான நேற்று மட்டும் இப்படம் 15 கோடி வசூல் செய்திருக்கிறது. இதில் வெளிநாட்டு வசூலையும் சேர்த்தால் கண்டிப்பாக இப்படம் 75 கோடி வசூலை தாண்டியிருக்கும் என கணிக்கப்படுகிறது.

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.