இருந்தாலும் இறந்தாலும் பேர் சொல்ல வேண்டும் இவர் போல யார் என்று ஓர் சொல்ல வேண்டும் என்ற பாடல் வரிகளுக்கு ஏற்ப வாழ்ந்து மறைந்தவர் எம்.ஜி.ஆர். இவர் இறந்து இத்தனை ஆண்டுகாலம் ஆனாலும் இன்றும் அவர் பெயரை உச்சரிக்காத ஆட்கள் இல்லை.
தமிழ் சினிமாவில் 60,70களில் வசூல் மன்னனாக இருந்தவர் எம்ஜிஆர். அவரது தோல்வி படம் கூட நல்ல வசூலை கொடுக்கும் என்பார்கள். சினிமா மட்டுமல்ல அரசியலிலும் முத்திடை பத்தித்தவர் அவர். எம்ஜிஆர் சினிமா கேரியரில் உலக சுற்றும் வாலிபன் படம் மிக முக்கியமானது. அந்த காலத்திலேயே உலகின் முக்கிய நாடுகளுக்கு சென்று படப்பிடிப்பை நடத்தினார். தற்போது வரை உலகம் சுற்றும் வாலிபன் எங்கு ரீ ரிலீஸ் செய்தாலும் வசூல் கொட்டிக் கொண்டுதான் உள்ளது.
இந்த நிலையில் பிர்டபல் யூடியுப் சேனல் ஒன்இல் இயக்குனர் பாரதி மோகன் பேட்டியளித்தார். அப்போது உலகம் சுற்றும் வாலிபன் படப்பிடிப்பு சமயத்தில் நடந்த சுவாரஸ்ய சம்பவம் ஒன்ரை கூறினார். அவர் கூறியதாவது,

உலகம் சுற்றும் வாலிபன் படப்பிடிப்பு சமயத்தில் தாய் லாந்து நடிகை ஒருவரை தேடினர்.அபோது தொலைக்காட்சியில் நடித்துகொண்டிருந்த மீட்டா ரூங்ரட் (Metta Roongrat) தேர்வு செய்யப்பட்டார். அவரை சந்திக்க சாதாரணமாக சென்றாராம் எம்.ஜி.ஆர். அப்போது அந்த நடிகை நடிக்க சம்மதம் படத்தின் ஹீரோ யார் எனக் கேட்டாராம். அதற்கு எம்ஜிஆர் நான்தான் என்று கூறினாராம். உடனே தாய்லாந்து நடிகை என்ன சொல்கிறீர்கள் நீங்கள் அப்பா மாதிரி இருகிறீர்களே என்று கூறினாராம். இதனை எம்ஜிஆர் அப்படத்தின் ஒளிப்பதிவாளரிடம் கூறினாராம் எம்ஜிஆர். அதற்கு அவர்கள் நீங்கள் இவ்வாறு சென்று இருக்க கூடாது சரி பார்த்துகொள்ளலாம் என்று கூறினாராம்

இந்த நிலையில்படப்பிடிப்புக்கு அந்த நடிகை வந்தாராம். அப்போது எம்ஜிஆர் பேண்ட் சர்ட் கோட்டுடன் அணிந்து கண்ணாடி போட்டபடி நின்று கொண்டிருந்தாராம். எம்ஜிஆரை கண்ட அந்த நடிகை மிகவும் ஆச்சர்யமாக பார்த்து வாவ் சூப்பரா இருக்கிங்க, இப்போ உங்க வயசே தெரியலயே என்று கூறினாராம். அவர்கள் இருவரும் இணைந்து நடித்ததுதான் பச்சகிளி முத்துசரம் முல்லைகொடி யாரோ என்ற பாடல்.
