சிறை படம் மூலம் அறிமுகம் ஆனவர் நடிகை நடிகர் அக்சய் குமார்.விஜய் நடிப்பில் ஹிட் அடித்த மாஸ்டர்,லியோ படங்களை தயாரித்த லிலித் குமாரின் மகனான இவர் முதல் படத்திலேயே அனைவரின் கவனத்தை ஈர்த்தார். முதல் படமே பாக்ஸ் ஆபிஸீல் 30 கோடிக்கு மேல் வசூலையும் ஈட்டியது.

முதல் பட வெற்றியை அடுத்து இரண்டாவது படத்திற்கு கதை கேட்டு வந்தனர். இந்த நிலையில் இன்று தனது இரண்டாவது படத்திற்கான பூஜை நடைபெற்றது. செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் சார்பில் S. S. லலித் குமார் தயாரிப்பில் புரொடக்ஷனில் அக்சய்குமாரின் அடுத்த படத்திற்காக (புரொடக்ஷன் நம்பர் 13) படத்தின் பணிகள் பூஜையுடன் தொடங்கப்பட்டு, படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

அறிமுக இயக்குநர் விக்னேஷ் வடிவேல் இயக்கத்தில் உருவாகி வரும் பெயரிடப்படாத திரைப்படத்தில் L. K . அக்ஷய் குமார், ஜாபர் சாதிக், நோபல் மற்றும் டியூட் படத்தில் நடித்த நடிகை ஐஸ்வர்யா சர்மா உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். இந்த திரைப்படத்திற்கு ஜென் மார்ட்டின் இசையமைக்கிறார். அனைத்து தரப்பினரும் ரசிக்கும் வகையில் காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து தயாராகிறது.

தமிழ் மற்றும் மலையாளம் என இரு மொழிகளில்உருவாகி வரும் இந்த படத்தை கோடை விடுமுறையில் வெளியிட திட்டமிடப்பட்டிருக்கிறது என படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
