சரக்கடிச்சிட்டு நைட்டு வருவானுங்க!.. வெங்கட் பிரபு, பிரேம்ஜி அலப்பறைகளை சொல்லும் கங்கை அமரன்..

Published on: January 23, 2026
gangai
---Advertisement---

இளையராஜாவின் சகோதரர் கங்கை அமரன். இளையராஜா இசையில் சாதிக்க வேண்டும் என சொந்த ஊரிலிருந்து கிளம்பி சென்னை கிளம்பிய போது பாடலாசிரியர் ஆகவேண்டும் என்கிற ஆசையில் அவருடனே வந்தவர்தான் கங்கை அமரன். இளையராஜா இசையமைப்பாளரான பின் அவரின் இசையில் தொடர்ந்து பாடல்களை எழுதி வந்தார் கங்கை அமரன்.

ஒருகட்டத்தில் கங்கை அமரன் தனியாக இசையமைக்க தொடங்கினார்.. அப்படி அவர் இசையமைத்த பல திரைப்படங்களில் பாடல்கள் சூப்பர் ஹிட் அடித்தது.. அதோடு நிறுத்தி விடாமல் இயக்குனர் அவதாரம் எடுத்து கரகாட்டக்காரன் உள்ளிட்ட சில படங்களையும் இயக்கினார் கங்கை அமரன்.

கங்கை அமரனுகு வெங்கட் பிரபு, பிரேம்ஜி என இரண்டு மகன்கள் உண்டு. அதில் வெங்கட் பிரபு இயக்குனராகிவிட பிரேம்ஜி நடிகராக மாறினார். வெங்கட் பிரபு பல படங்களை இயக்கியிருந்தாலும் அஜித்தை வைத்து இயக்கிய மங்காத்தா, விஜயை வைத்து இயக்கிய கோட், சிம்புவை வைத்து இயக்கிய மாநாடு போன்ற படங்கள் ரசிகர்களை கவர்ந்தது.

வெங்கட் பிரபுவுக்கும், பிரேம்ஜிக்கும் அடிக்கடி பார்ட்டிக்கு போகும் பழக்கம் உண்டு. ஏனெனில், வெங்கட்பிரபுவின் நண்பர் கூட்டமும் பெரியது. இந்நிலையில் ஊடகம் ஒன்றில் பேசிய கங்கை அமரன் ‘என்னோட நண்பர்கள் வெளிநாட்டிலிருந்து வரும்போது எனக்கு சரக்கு பாட்டில் வாங்கிட்டு வருவாங்க.. அதை நான் என்னுடைய ரூமில் வைத்து விடுவேன்.. பசங்க வீட்ல ஒண்ணா இருக்கும் போது பாட்ட்டிக்கு போவாங்க.. டேய் உங்களுக்கு எது வேணுமோ எடுத்துட்டு போங்கன்னு சொல்லுவேன்.. இதெல்லாம் வேணாம்பான்னு சொல்லிட்டு போயிடுவாங்க..

குடிச்சிட்டு நைட்டு 11 மணிக்கு பீர் வாசனை வரக்கூடாதுன்னு என் ரூம் ஜன்னல் வழியா ‘டாடி தூங்கிட்டியா’ன்னு கேட்பானுங்க.. அதாவது வந்துட்டோம்னு அட்டனன்ஸ் போடுறாங்களாம்.. அப்படிப்பட்ட பிள்ளைங்க.. அப்படிப்பட்ட அப்பா’ என ஓப்பனாக பேசியிருக்கிறார்.