Homelatest newsவிஜய் ஆண்டனி இன்னொரு விஜயகாந்த்!… புரட்யூசர் சொன்ன அந்த சம்பவம்!…

விஜய் ஆண்டனி இன்னொரு விஜயகாந்த்!… புரட்யூசர் சொன்ன அந்த சம்பவம்!…

தமிழ் சினிமா பல நடிகர்களை பார்த்திருந்தாலும் விஜயகாந்தை போல நல்ல, எளிமையான, மற்றொரு உதவும் குணம் கொண்ட, மற்றவர்களை வளர்த்துவிடும் ஒரு மனிதரை, ஒரு நடிகரை யாரும் பார்த்ததில்லை.
பல நடிகர்களும் பலருக்கும் பல உதவிகளை செய்திருந்தாலும் விஜயகாந்த் அளவுக்கு யாருமே செய்ததில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

பல புதிய நடிகர்களை, இயக்குனர்களை, தயாரிப்பாளர்களை அறிமுகம் செய்திருக்கிறார் விஜயகாந்த். மேலும் தன்னை சுற்றியுள்ளவர்களுக்கு என்ன பிரச்சனை என்றாலும் அவரால் என்ன முடியுமோ அதை செய்தவர்தான் விஜயகாந்த்.. திரையுலகில் விஜகாந்தால் வளர்ந்தவர்கள், வசதி பெற்றவர்கள், உதவி பெற்றவர்கள் பலர்.

அதனால்தான் அவரை திரையுலகமே கொண்டாடுகிறது.. அவர் மறைந்த பின்னரும் விஜயகாந்தை மக்கள் கொண்டாடுவற்கு அவரின் குணம்தான் காரணம். ‘அந்த வானத்தைப்போல மனம் படைத்த மன்னவனே’ இந்த பாடலில் வரும் வரிகள் விஜயகாந்த்துக்கு 100 சதவீதம் பொருந்தும்.
அவர் உயிரோடு இருக்கும்போது அவரை ட்ரோல் செய்தவர்கள், அவரை கிண்டலடித்தவர்கள் அவர் மறைந்த பின் அவரை கொண்டாடுகிறார்கள்..

விஜயகாந்தை வைத்து படமெடுத்தவரும், விஜயகாந்ந்துக்கு நெருக்கமானவருமாக இர்ந்த தயாரிப்பாளர் டி.சிவா ஊடகம் ஒன்றில் பேசியபோது ‘ஒரு தயாரிப்பாளராக விஜய் ஆண்டனியை நான் விஜயகாந்த் மாதிரிதான் பார்ப்பேன்.. ஷுடிட்ங்கில் கேரவேன் வேண்டாம் என சொல்லிவிட்டு ஓரமா ஒரு இடத்தில் உட்கார்ந்திருப்பார்.

அசிஸ்டெண்ட் ஏதாவது கேட்டா வாங்கி தராதீங்க சார்.. முறுக்கு, சுண்டல் எடுத்துட்டு வந்துருவேன் சார்.. என்று சொல்வார்.. எனக்கு ஸ்பெஷலா ரூம் போடாதீங்க.. எல்லாருக்கும் போடுற மாதிரி சாதாரண லாட்ஜ்ல ரூம் போடுங்கன்னு சொல்லுவார்.. காசு கொடுக்கலைன்னா கூட ‘பரவாயில்லை சார் அப்புறம் வாங்கிக்கிறேன்’ னு சொல்லுவார்’ என சொல்லியிருக்கிறார்.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments