சூர்யாவின் லைன் அப் இப்போது ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆச்சரியத்தை வரவழைத்திருக்கிறது. தொடர்ந்து சூர்யாவின் நடிப்பில் வெளியான கங்குவா மற்றும் ரெட்ரோ போன்ற திரைப்படங்களுக்கு சுமாரான வரவேற்பே கிடைத்த நிலையில் அடுத்து சூர்யா பெரும் வெற்றியை கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். கங்குவா படத்திற்காக கடின உழைப்பை போட்ட சூர்யா அந்தப் படம் பெரும் தோல்வியை தந்து ரசிகர்களை ஏமாற்றியது.
தற்போது சூர்யா ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் கருப்பு படத்தில் நடித்து முடித்துள்ளார். அந்தப் படத்தின் ரிலீஸ் தேதி பற்றி எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகவில்லை. அதே சமயம் தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தியில் நடித்து வருகிறார். இதற்கிடையில் சூர்யா அடுத்து எந்தெந்த இயக்குனர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார்? யாரெல்லாம் அவர் லைன் அப்பில் இருக்கிறார்கள் என்பது பற்றி ஒரு தகவல் கிடைத்துள்ளது.
வெங்கி அட்லூரி படத்திற்கு பிறகு சூர்யாவின் 47வது படத்தை ஜித்து மாதவன் இயக்குகிறார். இந்த நிலையில் அபிஷன் ஜீவிந்த், நஹாஷ்ஹிதயாத், மாரிசெல்வராஜ், விவேக் ஆதிரயா,பரசுராம், சண்டு முண்டேட்டி, அமல் நீரத் என இவர்கள் சூர்யாவின் புராஜக்ட்டில் இருப்பார்கள் என்று தெரிகிறது. இந்த படங்கள் அடுத்தடுத்து ஹிட்டானால் சூர்யாவின் கெரியர் வேறு மாதிரி இருக்கும் என்றும் கூறி வருகிறார்கள்.
ஏனெனில் இந்த இயக்குனர்கள் அனைவருமே சினிமாவில் நல்ல தரமான படங்களை கொடுத்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்களுடன் சூர்யா இணைவது மேலும் ஒரு பலம். அதனால் நல்ல கதைகள் அமைந்தால் இது சூர்யாவிற்கு எதிர்பார்க்காத வெற்றியாக இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது.





