தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக பார்க்கப்படுபவர் அஜித். பல வருடங்களாகவே நடிகர் விஜய்க்கு சரியான போட்டி நடிகராக அஜித் வலம் வந்தார். தற்போது விஜய் அரசியலுக்கு சென்றுவிட்ட நிலையில் அஜித் முக்கிய நடிகராக பார்க்கப்படுகிறார். ஒருபக்கம் அஜித் கடந்த சில வருடங்களாகவே தொடர்ந்து கார் ரேஸ் போட்டிகளில் கலந்துகொண்டு வருகிறார்.
துபாய், ஐரோப்பிய நாடுகள், மலேசியா என பல நாடுகளிலும் நடந்த கார் ரேஸ் போட்டி தற்போது மீண்டும் துபாயில் நடந்து வருகிறது. இதில் அஜித்தின் டீம் கலந்து கொண்டு வருகிறது.. ஒருபககம், அஜித்தின் புதிய புதிய படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குவது உறுதியாகியிருந்தாலும் இந்த படத்துக்கு இதுவரையிலும் தயாரிப்பாளர் கிடைக்கவில்லை.. அதற்கு முக்கிய காரணம் அஜித் 185 கோடி சம்பளம் கேட்கிறார்.. அவ்வளவு சம்பளத்தை அவருக்கு கொடுக்க இங்கே தயாரிப்பாளர்கள் யாரும் இல்லை. எனவே பேச்சுவார்த்தை இழுபறியிலேயே இருக்கிறது.
இந்நிலையில்தான் ஆதிக் ரவிச்சந்திரன் படத்திற்கு பிறகு அஜித் ஏ.எல் விஜய் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடிக்க வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது. ஏனெனில் தற்போது அஜித்தின் கார் ரேஸ் தொடர்பான டாக்குமெண்ட்ரியை இயக்குனர் ஏ.எல் விஜய்தான் எடுத்து வருகிறார்..
அவருடன் பழகியதில் அவரை அஜித்துக்கு பிடித்து போனதால் ‘மீண்டும் நாம் இணைந்து ஒரு படம் செய்வோம்’ என அஜித் அவரிடம் சொல்லியிருப்பதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே அஜித்தை வைத்து க்ரீடம் படத்தை ஏ.எல். விஜய் இயக்கியுள்ளார். அஜித்தை வைத்து ஏ.எல். விஜய் இயக்கும் திரைப்படம் ஒரு குடும்ப காமெடி படமாக இருக்கும் என சொல்கிறார்கள்.. இது அஜித்தின் 65வது திரைப்படமாக இருக்கும்.





