">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
சந்தைக்கு போகனுமா? கிருமி நாசினி சுரங்கத்தில் நுழைந்து செல்லவேண்டும்! எங்கு தெரியுமா?
திருப்பூரில் கொரோனா வைரஸ் பரவும் அச்சத்தால் அம்மாவட்ட நிர்வாகம் கிருமி நாசினி சுரங்கம் என்ற ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது. வைரஸுக்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1500 ஐ தாண்டியுள்ளது. இந்தியாவில் மகாராஷ்ட்ரா மற்றும் கேரளாவுக்கு அடுத்த இடத்தில் தமிழகம் மூன்றாவது இடத்தில் உள்ளது. இதுவரை தமிழகத்தில் 124 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் திருப்பூர் மாவட்டத்தில் மக்கள் அத்தியாவசியத் தேவைகளுக்கு வெளியே செல்வதற்கு ஏதுவாக கிருமிநாசினி சுரங்கம் என்ற அமைப்பை அம்மாவட்ட நிர்வாகம் உருவாக்கியுள்ளது. அதன்படி சந்தைக்கு அல்லது கடைகளுக்கு செல்லும் மக்கள் அந்த சுரங்கத்தைக் கடந்தே செல்லவேண்டும். அதில் தெளிக்கப்படும் கிருமிநாசினிகள் மூலம் கிருமிகள் அழிக்கப்பட்டு விடும் எனக் கூறப்படுகிறது. இதன் மூலம் மக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என அம்மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.