vijay

நடிகராக இருந்து அரசியல்வாதியாக மாறியிருப்பவர் விஜய். நடிகராக இருந்த வரை அவர் மீதான விமர்சனங்கள் குறைவாகவே இருந்தது. ஆனால் எப்போது அவர் அரசியலுக்கு வந்தாரோ அப்போதே அவரைப் பற்றிய பல விமர்சனங்கள் வர துவங்கியது.

குறிப்பாக, அரசியலுக்கு வந்து இரண்டு வருடத்தில் முதலமைச்சராக வேண்டும் என ஆசைப்படுகிறார்.. திமுகவுக்கும் தவெகவுக்கும் இடையேதான் போட்டி என சொல்கிறார்.. இது அதீத நம்பிக்கை.. இது நடக்க வாய்ப்பே இல்லை.. தன்னுடைய ரசிகர்களை அவர் அரசியல் நெறிப்படுத்தவில்லை.. இவரே ஒரு அரசியல் தலைவர் இல்லை… கரூர் சம்பவம் நடந்த போது ஓடி ஒளிந்து கொண்டார்.. இரண்டு மாதங்கள் வீட்டிலிருந்து வெளியே வரவில்லை என்றெல்லாம் திமுகவினரை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்..

அதேபோல் அதிமுகவும் தற்போது விஜயை விமர்சிக்க துவங்கியிருக்கிறது.. அந்த வகையில் அதிமுக நட்சத்திர பேச்சாளராக கருதப்பட்ட செய்தியாளர் நிர்மலா பெரியசாமி சமீபத்தில் ஊடகம் ஒன்றில் பேசியபோது கூறியதாவது:

விஜய் எப்படி படம் எடுக்கிறார்? மாஸ்டர்ன்னு ஒரு படம் எடுத்தாரு.. அந்தப் படம் முழுவதும் குடிச்சிக்கிட்டே இருப்பாரு.. இதுல வேற அவர் காலேஜ் ப்ரொபசர்.. எப்படிப்பட்ட துரோகம்!.. சமூகத்துக்கு நீங்க பண்றீங்க.. தவறான எண்ணங்களை, விஷத்தை விதைக்கிறீங்க.. இதை பார்க்கிற என்னுடைய தமிழ் பிள்ளைகள் என்ன பண்ணும்? அப்ப குடிக்கிகிறது தப்பு இல்லன்னு தோணும்.. நம்ம தலைவரே குடிக்கிறார்.. நம்ம குடிச்சா என்னன்னு நினைக்க மாட்டாங்களா?.. நீங்க புரட்சித்தலைவர் எம்ஜிஆருக்கு சமமா பேசுறீங்க!..’ என பொங்கியிருக்கிறார்.