ilaiyaraja
ilaiyaraja

சோகப்பாடல் என்றால் சோகமாகத் தான் நாம் ரசித்து இருப்போம். ஆனால் அதற்குள் ஜாலி மூடையும் லாவகமாக சொருகி இருப்பார். அது இளையராஜா என்ற அந்த லெஜன்டால் மட்டும் தான் முடியும் என்றால் மிகையில்லை. அவ்வளவு அற்புதமான ரசனை மிக்க அந்தப் பாடல் எது? இடம்பெற்ற படம் எதுன்னு பார்க்கலாமா…

ஜேசுதாஸ் தமிழில் குரல் மாற்றிப் பாடிய ஒரே பாடல் இதுதான். தூறல் நின்னு போச்சு படத்தில் பாக்கியராஜ் நடித்து பட்டி தொட்டி எங்கும் பட்டையைக் கிளப்பியது. இளையராஜா இசை அமைத்துள்ளார். இந்தப் பாடலில் பாக்கியராஜ் காதலுக்கு மாமனராக வரும் நம்பியார் ஆதரவு கொடுப்பார்.

பாக்கியராஜின் காதலில் சோகம் வருகிறது. அது போக ஒரு பாடல் தேவைப்படும். அது தான் ஏரிக்கரைப் பூங்காற்றே படம். இந்தப் பாடலை ஜேசுதாஸ் பாடியுள்ளார். இந்தப் பாடல் சோக சூழலில் தான் வருகிறது. ஆனால் பாடலை இளையராஜா ஜாலியாக எடுத்து இசை அமைத்து இருப்பார். பாடலைப் படத்தில் பாக்கியராஜ் தான் படத்தில் பாடுவார்.

அவர் பாடும்போது சோகமாக இருக்கும். ஆனால் பாடலின் இடையே நம்பியாருக்குப் பழைய காதலின் நினைவுகள் வரும். அதனால் இது ஒரு வித்தியாசமான ரசனையை ரசிகர்களுக்குத் தந்தது. இந்தப் படத்தின் சூப்பர்ஹிட்டுக்குக் காரணம் இளையராஜாவின் இசையும் தான் என்றால் மிகையில்லை.

அவ்வளவு அற்புதமான பாடல்களைப் படத்தில் கொடுத்து இருந்தார். 1982ல் வெளியான இந்தப் படத்தை இயக்கியவர் பாக்கியராஜ். சுலக்ஷனா ஜோடியாக நடித்துள்ளார். பூபாளம் இசைக்கும், தங்கச்சங்கிலி, என் சோகக் கதையை, தாலாட்ட நான் பொறந்தேன் ஆகிய பாடல்களும் படத்தில் இடம்பெற்றுள்ளன.