நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடித்த ஜெயிலர் திரைப்படம் சூப்பர் ஹிட் அடித்ததால் அதன் இரண்டாம் பாகத்தை சில மாதங்களுக்கு ன்பு துவங்கினார்கள். கூலி படத்தை முடித்துவிட்டு ஜெயிலர் 2 படத்தில் நடிக்க தொடங்கினார் ரஜினிகாந்த். இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை உள்ளிட்ட பல இடங்களிலும் நடந்தது.
இதுவரை இல்லாத அளவுக்கு இந்த படத்தில் பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, மோகன்லால், சிவ்ராஜ் குமார், எஸ்.ஜே.சூர்யா, சந்தானம் உள்ளிட்ட பலரும் இந்த படத்தில் நடித்திருக்கிறார்கள்.
இந்த படத்தை ஆகஸ்ட் மாதம் வெளியிட திட்டமிட்டிருந்தனர். ஆனால் தற்போது ஜூன் மாதமே வெளியாக வாய்ப்புபிருக்கிறது என்கிறார்கள்.. ஏனெனில் படத்தில் ரஜினி நடித்த காட்சிகளை எடுத்து முடித்து விட்டார்கல் ஒருபக்கம், இதுவரை எடுத்த காட்சிகளுக்கு போஸ்ட் புரடெக்ஷன் பணிகளை நெல்சன் முடித்துவிட்டார்.
எனவே படம் ஆக ஜூன் மாதமே வெளியாகிவிடும் என்கிறார்கள். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
