
திரைக்கதை மன்னன் என்று போற்றப்படும் பாக்கியராஜ் திரையுலக வாழ்க்கையில் சமீபத்தில் தான் 50 ஆண்டுகளைக் கடந்து அதை விழாவாகக் கொண்டாடினார். அவரது படங்களில் அந்த 7 நாள்கள், இது நம்ம ஆளு மிகச் சிறப்பு. சிக்கலான இந்தக் கதை அவரது நேர்த்தியான திரைக்கதையால் மெருகூட்டப்பட்டது. அந்த வகையில் 50ஆண்டுகளாக அவர் சேர்த்து வைத்த பேர் அவர் பேசிய அந்த ஒரு வார்த்தையால் கெட்டுப்போனது என பிரபலம் ஒருவர் பொளந்து கட்டியுள்ளார். என்ன விவரம்னு பாருங்க.
நான் ஒரு கம்மவார் என்பதில் பெருமை கொள்கிறேன்னு தெலுங்கில் பாக்கியராஜ் பேசியது சர்ச்சைக்குள்ளாகியுள்ளது. ஒரு மாநாட்டுல தான் இப்படிப் பேசியுள்ளார். மதியம் 2 மணிக்குத் தான் பாக்கியராஜ் எழுந்திருப்பாராம். அவருக்கு உலக நடப்பே எதுன்னு தெரியாது. அப்படித்தான் வாழ்ந்துக்கிட்டு இருக்காரு.
20 வருஷமா சினிமா வாய்ப்பு இல்லை. தனிமை கொடூரமானது. அந்தப் புகழ், அந்த பரபரப்பு குறையும் போது மனசால நொந்து போவாங்க. அதுவும் ஒரு காரணமாக இருக்கலாம். சாதிசங்க தலைவர்கள் யார் பிரபலமா இருக்காங்களோ அவங்களை இழுத்துக் கொண்டு விடுவதில் கில்லாடி. அந்த வகையில் பாக்கியராஜைக் கொண்டு வந்து மாநாட்டில் பேச வைத்து விட்டனர். அப்போது அவர் கூட்டத்தைக் கண்டு இப்படி பேசி விட்டார். நம்மைப் பார்க்கத் தான் இவ்ளோ கூட்டமா என்று நினைத்து விட்டார் போலும். சினிமா இப்ப எடுக்க வாய்ப்பு இல்லை. சினிமா எடுத்தாலும் யாரும் வர மாட்டாங்க.
அப்படின்னு நினைச்சி அவர் பேசுனதோட விளைவு தான் இவ்ளோ சர்ச்சை. சாதி என்பது கட்டமைக்கப்பட்ட பிம்பம். சாதி குறித்து இவ்ளோ பெருமை பாக்கியராஜிக்கு வேணுமா? தன்னை இழந்து விட்டாரா பாக்கியராஜ் என்ற கேள்வி எழுகிறது. இது பலருக்கும் பாடம். பாக்கியராஜ் பாரதிராஜாவின் மாணவன். வளர்ந்த தலைமுறை. இவர் பல தலைமுறைகளை உருவாக்கியவர்.
50 ஆண்டுகளாக அவர் சேர்த்து வைத்த பேரை இந்த ஒரு வார்த்தை உளறலால் பேரைக் கெடுத்துக்கிட்டாரே என்று தோன்றுகிறது. அதனால் இனிமேலும் இப்படி அவர் உளறக்கூடாது. இது வெறும் வாயை மென்றவனுக்கு பாக்கியராஜ் அவல் கொடுத்தது போன்றது. டெய்லி மதியம் 2மணிக்கு எழுந்திருப்பவர் காலையில 6 மணிக்கு எழுந்தாருன்னா இவ்ளோ பெரிய சிக்கல் வராம இருந்துருக்கும் என்பதுதான் யதார்த்தம். மேற்கண்ட தகவலை பிரபல திரை ஆய்வாளர் ஆலங்குடி வெள்ளைச்சாமி தெரிவித்துள்ளார்.