---Advertisement---

பொன்னம்பலத்தை பார்த்து பயந்து தூக்கு போட போட பெண்!. மனுஷன் நொந்து போயிட்டாராம்!…

Published on: February 20, 2026
ponnambalam
---Advertisement---

1980களில் இருந்து தமிழ் சினிமாவில் சண்டை காட்சி நடிகராக நடிக்க துவங்கியவர் பொன்னம்பலம். ஒருகட்டத்தில் ஹீரோவுடன் தனியாக சண்டை போடும் ஆக்சன் நடிகராக மாறினார். நல்ல உயரம், ஆஜானு பாகுவான உடம்பு என ரசிகர்களை மிரட்டினார்.. இவரை பார்த்தாலே குழந்தைகள் பயப்படுவார்கள்.. விஜயகாந்தின் பல படங்களில் அவருடன் தனியாக சண்டை போடும் வாய்ப்பு கிடைத்தது.. நாட்டாமை உள்ளிட்ட சில படங்களில் வில்லனாகவும் நடித்திருக்கிறார் பொன்னம்பலம்..

கடந்த பல வருடங்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். சமீபத்தில் கூட தனது அண்ணன் தனக்கு துரோகம் செய்துவிட்டதாகவும், பியரில் விஷம் கலந்து கொடுத்து விட்டதாகவும், அதனால்தான் தனது கிட்னிகள் செயலிழந்து போனதாகவும்ஊடகங்களில் சொல்லியிருந்தார்.
பொன்னம்பலத்தின் மருத்துவ சிகிச்சைக்கு நடிகர் சிரஞ்சீவி நிறைய பணத்தை கொடுத்து உதவியிருக்கிறார்..

இந்நிலையில் ஊடகம் ஒன்றில் பேசிய பொன்னம்பலம் ‘கல்யாணத்துக்கு எனக்கு பொண்ணு தேடினாங்க.. ஆனால் கிடைக்கவே இல்லை.. பொண்ணு வீட்ல மாப்பிள்ளை பொன்னம்பலம் என்று சொன்னால் அய்யோ கபாலியான்னு பொண்ணு வேண்டாம்னு சொல்லிடும். காஞ்சிபுரத்தில் ஒரு பொண்ணு பாக்கப் போனோம்.. பிளாஸ்டிக் சேர் போட்டாங்க.. அதுல உக்காந்தேன்.. சேர் உடைந்துவிட்டது.. நான் அப்பவே நினைச்சேன்.. இந்த கல்யாணம் நடக்காதுன்னு.. நினைச்ச மாதிரியே என்னை கல்யாணம் பண்ணிக்க பயந்து பொண்ணு தூக்கு மாட்டிக்க போயிடுச்சு’ என்று கூறியிருக்கிறார்.