
தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக இருப்பவர் சிம்பு. சிம்புவுக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். சிம்பு தொடர்ந்து நடிக்க வேண்டும் என அவர்கள் ஆசைப்படுகிறார்கள்.. ஆனால் சிம்பு அப்படி நடிப்பதில்லை என்பதுதான் பெரிய குறையே. சிம்பு நடித்த படங்களுக்கு ஒன்று அவரால் பிரச்சினை வரும்.. இல்லையென்றால் வேறு வழியில் பிரச்சனை வரும்.. சிம்பு படம் என்றாலே சிக்கல்தான் என்கிற நிலைதான் இப்போது கோலிவுட்டில் இருக்கிறது.
தக் லைப் படம் வெளியாகி 2 வருடங்கள் கழித்து சிம்புவின் தக் லைப் படம் வெளியானது. ஆனால் அந்த படம் ஓடவில்லை.. தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் அரசன் படத்தில் சிம்பு நடித்து வருகிறார்.. அதற்கான படபடப்பு தற்போது நிறுத்தப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது . இந்நிலையில்தான், டியூட் படத்தை இயக்கிய கீர்த்திஸ்வரன் இயக்கத்தில் சிம்பு ஒரு புதிய படத்தில் நடிப்பார் என செய்திகள் வெளியாகியிருக்கிறது. டியூட் படத்தை போலவே இந்த படமும் சர்ச்சையான கதையாக இருக்கும் என சொல்லப்படுகிறது. மேலும் இந்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது.
சிம்பு என்றாலே சர்ச்சைதான்.. இதில் சர்ச்சையான கதை என்றால் என்னவாகும் என்பது தெரியவில்லை.. இந்த படத்திற்காக சிம்புவுக்கு அதிக சம்பளம் கொடுக்கப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. அரசன் படத்துக்கு பின் சிம்பு கீர்த்திஸ்வரன் இயக்கத்தில் நடிப்பாரா இல்லை அஸ்வத் மரிமுத்து இயகக்த்தில் நடிப்பாரா என்பது விரைவில் தெரிந்து விடும்..