
தமிழ் சினிமாவில் விஜய்க்கு போட்டி நடிகராக இருப்பவர் அஜித்குமார். நடிகராக இருப்பதோடு மட்டுமல்லாமல் கார் ரேஸ்களிலும் அதிக ஆர்வம் கொண்டவர் இவர். கடந்த இரண்டு வருடங்களுக்கு மேல் தொடர்ந்து கார் ரேஸ்களில் கலந்துகொண்டு வருகிறார். கார் ரேஸ் மட்டுமில்லாமால், பைக்கில் அதிக தூரம் பயணிப்பது, துப்பாக்கி சூடும் போட்டிகளில் கலந்து கொள்வது, ரிமோட் ஹெலிகாப்டரை இயக்குவது என பலவற்றிலும் அஜித்துக்கு அதிக ஆர்வம் உண்டு..
அதேபோல் அஜித்துக்கு சமைப்பதில் அதிக ஆர்வம் உண்டு. எந்த வகையான உணவாக இருந்தாலும் அவர் வீட்டில் சமைத்து விடுவார்.. குறிப்பாக பிரியாணி சமைப்பதில் அஜித் கில்லாடி.. ஷூட்டிங் ஸ்பாட்டில் அவ்வப்போது பிரியாணி சமைத்து படக்குழுவுக்கு கொடுப்பது அஜித்தின் வழக்கம்..
வீட்டில் கூட குழந்தைகள் என்ன கேட்கிறார்களோ அதை செய்து கொடுப்பார் அஜித் என அவரின் மனைவி ஷாலினியின் தங்கையே ஒரு பேட்டியில் சொல்லியிருந்தார். இந்நிலையில் சமீபத்தில் ஒரு விருது விழாவில் பேசிய நடிகை ஷாலினி ‘அவர் சமைப்பார்.. நான் சாப்பிடுவேன்.. அது என்ன ரெசிபி என்றெல்லாம் எனக்கு தெரியாது.. ஆனால் அவர் சமைத்தா 100 பேருக்கு கொடுக்கும் அளவுக்கு செய்வார்..
அவருக்கு சமைப்பது மிகவும் பிடிக்கும்.. மற்றவர்களுக்கு உணவளிப்பது பிடிக்கும்.. யாராவது வீட்டுக்கு வந்தால் ‘சாப்பிட என்ன செய்யட்டும்?’ என்றுதான் முதலில் கேட்பார்.. அவர் எவ்வளவு சோர்வாக இருந்தாலும் சரி கேட்டதை சமைத்துக் கொடுப்பார்.. எப்போதுமே அவருக்கு பிறருக்காக சமைப்பது மிகவும் பிடிக்கும் எனக் கூறியிருக்கிறார்.