
Box Office
Kantara 2: கலெக்ஷனில் கல்லா கட்டும் காந்தாரா 2… இரண்டு நாள் வசூல் அப்டேட்!….
Kantara Chapter 1: ரிஷப் ஷெட்டி நடித்து, இயக்கி கன்னடத்தில் உருவாகி தமிழ், ஹிந்தி மொழிகளிலும் டப் செய்யப்பட்டு 2022ம் வருடம் வெளியான காந்தாரா திரைப்படம் 400 கோடி வசூலை தாண்டியது. இத்தனைக்கும் 16 கோடி பட்ஜெட்டில் உருவான திரைப்படம் அது. அதன்பின் காந்தாரா இரண்டாம் பாகத்தை Kantara chapter 1 என்கிற தலைப்பில் இயக்கினார் ரிஷப் ஷெட்டி. 2 வருடங்களுக்கும் மேல் கடுமையான உழைப்பை கொட்டி இப்படத்தை உருவாக்கியுள்ளனர்.
காந்தாரா 2 திரைப்படம் கடந்த 2ம் தேதி உலகமெங்கும் ஒரு பேன் இண்டியா படமாக வெளியானது. முதல் பாகத்தின் இறுதிக்காட்சி எங்கு முடிந்ததோ அதே இடத்தில் காந்தாரா 2 துவங்குகிறது. காட்டுக்குள் முன்னோர்கள் எப்படி தானாக மறைகிறார்கள் என்பதன் பின்னணியில் புராணக்கதை சொல்லப்பட்டிருக்கிறது. சில நூறு ஆண்டுகளுக்கு முன்பு காடுகளில் வசிக்கும் மக்களுக்கும் அந்த இடத்தை கைப்பற்ற முயற்சி செய்யும் ஒரு மன்னர் குடும்பத்திற்கும் இடையே நடக்கும் மோதலைஇப்படத்தில் சொல்லி இருக்கிறார்கள்.
முதல் பாகத்தை போலவே மக்களுக்கு ஒரு துன்பம் எனில் கடவுள் வந்து காப்பார் என்பதை இந்த படத்திலும் காட்டியிருக்கிறார்கள். இந்த படத்தில் இடம்பெற்ற சண்டை காட்சிகளும், VFX காட்சிகளும் பாராட்டை பெற்றிருக்கிறது. நடிப்பு, சண்டை காட்சி,ஒளிப்பதிவு, VFX ஆகியவற்றிக்கு தேசிய விருதுகள் கிடைக்கும் என பலரும் சொல்கிறார்கள்.
படத்தில் சில குறைகள் இருந்தாலும் படத்திற்கு பாசிட்டிவான விமர்சனங்கள் வருவதால் இப்படம் நல்ல வசூலை பெற்று வருகிறது. படம் வெளியான முதல் நாள் இப்படம் இந்திய அளவில் 63 கோடி வசூல் செய்தது. இரண்டாம் நாளான நேற்று இப்படம் 38 கோடி வசூல் செய்திருப்பதாக சொல்லப்படுகிறது. அதாவடு இரண்டு நாளில் காந்தாரா 2 படத்தின் வசூல் நூறு கோடி தாண்டி இருக்கிறது.