Connect with us

வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்… ரோட்டில் தூங்கிய சின்னத்திரையின் பிரபல நடிகை!

latest news

வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்… ரோட்டில் தூங்கிய சின்னத்திரையின் பிரபல நடிகை!

சின்னத்திரை வட்டாரத்தில் புகழ் பெற்ற நடிகைகள் எப்போதுமே பெரிய அளவில் வசதி படைத்த அளவில் இருப்பார்கள் என்ற எண்ணத்துக்கு முட்டுக்கட்டை போட்டு இருக்கிறார் நடிகை ஒருவர். 

தற்போது விஜய் மற்றும் சன் டிவியில் எக்கசக்கமான சீரியல்கள் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. ஆனாலும் 90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரிட் சீரியல் லிஸ்ட் இன்னமும் ஒரு சீரியல்கள் மட்டுமே இடம் பெற்றுள்ளது. அதில் ஒன்று தான் சிந்து பைரவி. 

இரண்டு குட்டி பெண்களின் கதையாக தொடங்கி அவர்களின் காதல் வாழ்க்கை வரை ஒளிபரப்பப்பட்டது. அதிலும் அப்போதே வட இந்திய சீரியல்களுக்கு இங்கு மவுசு அதிகம். அதில் சிந்து பைரவிக்கு முக்கிய இடமுண்டு. இதில் வில்லியாக நடித்தவர் ரேஷ்மி தேசாய்.

தற்போது சீரியல் தாண்டி படங்களிலும் பிஸியாக நடித்து வரும் இவரின் சொத்து மதிப்பு 15 கோடியை தாண்டும் என்றும் 3 கோடி வரை சம்பளம் வாங்குவதாகவும் தகவல்கள் தெரிவிக்கிறது. ஆனால் இவரின் ஆரம்பகாலம் ரொம்பவே கொடுமையாக இருந்ததாம்.

ஆரம்ப காலத்திலேயே புது வீடு ஒன்றை வாங்கி கடனில் சிக்கினார். 3.5 கோடி கடன் இருந்ததாம். அதை கட்ட முடியாமல் வீட்டை ஜப்தி செய்து விட்டதாகவும், ரோட்டில் நான்கு நாட்கள் ரேஷ்மி படுத்து தூங்கி காலமும் இருந்ததாம். பொருளை மேனேஜர் வீட்டில் வைத்திருந்து பின்னர் அவர் வாழ்க்கை பல ட்விஸ்ட் அண்ட் டர்ன் போட்டு இப்போது இருக்க நிலைமைக்கு வந்துள்ளார்.

To Top