பாக்யராஜ் இயக்கி நடித்து ஆயிரத்து 1981ம் வருடம் வெளியான திரைப்படம் அந்த ஏழு நாட்கள். இந்த படத்தில் அம்பிகா கதாநாயகியாக நடித்திருந்தார். மேலும் ராஜேஷ் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். கேரளாவிலிருந்து இசையமைப்பாளராகும் ஆசையில் சென்னை வந்து வாய்ப்பு தேடும் வேடத்தில் பாக்யராஜ் நடித்திருந்தார். இந்த படத்தில் தமிழ் கலாச்சாரமான தாலியின் பெருமை பற்றி பாக்கியராஜ் பேசியிருந்தார்..
பாக்யராஜை விரும்பிய அம்பிகா சந்தர்ப்ப சூழ்நிலையால் ஏற்கனவே திருமணமாகி மனைவியை இழந்த ராஜேஷை திருமணம் செய்து கொள்வார். இதை தெரிந்துகொண்ட ராஜேஷ் அம்பிகாவை மீண்டும் பாக்யராஜுடன் சேர்த்து வைக்க ஆசைப்படுவார். ஆனால், பாக்யராஜ் ஏற்றுக்கொள்ளமாட்டார்.
‘நீங்கள் தட்டிய தாலியை கழட்டி எறியுங்கள்.. நான் சம்மதிக்கிறேன்’ என ராஜேஷிடம் சொல்வார். ராஜேஷ் தாலியை கழட்டி எறிய செல்லும்போது அம்பிகா அதை ஏற்கமாட்டார். அந்த காட்சி முடிந்ததும் ‘என் காதலி உங்கள் மனைவியாகலாம்.. ஆனால் உங்கள் மனைவி என் காதலியாக முடியாது’ என பன்ச் வசனம் பேசி படத்தை முடித்திருப்பார் பாக்யராஜ்..

அந்த திரைப்படம் பெண்களிடம் பெரும் வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட் அடித்தது. பாக்யராஜ் எம்ஜிஆரின் தீவிர ரசிகர். எனவே பாக்யராஜின் படங்களை எம்ஜிஆர் பார்ப்பது வழக்கம். இந்த படம் வெளியான போது தமிழகத்தின் முதல்வராக எம்ஜிஆர் இருந்தார். ஆனாலும் அந்த படத்திற்கு தமிழக அரசு விருது கொடுக்கவில்லை.. இன்னும் சொல்லப்போனால் இந்த படத்திற்கு விருது கொடுக்க எம்ஜிஆர் மறுத்தார் என்றுதான் சொல்ல வேண்டும்..
அதற்கு காரணம் பாக்யராஜ் அந்த படத்தில் பாலக்காட்டு மாதவன் என்கிற கதாபாத்தில் நடித்திருந்தார். எம்ஜிஆர் பாலக்காட்டை சேர்ந்தவர் என்பதால் இந்த படத்துக்கு விருது கொடுத்தால் ‘எம்ஜிஆர் அந்த ஊரை சேர்ந்தவர். அதனால்தான் பாக்யராஜுக்கு விருது கொடுத்திருகிறார்’ என விமர்சனங்கள் வரும்.. மக்களின் அங்கீகாரமே இந்த படத்தை பெரிய விருது’ என பாக்கியராஜ் நேரில் அழைத்து எம்.ஜி.ஆர் சொன்னதாக தனது 50-வது ஆண்டு நிறைவு விழாவில் பாக்யராஜ் இந்த தகவலை பகிர்ந்து கொண்டார்.





