எட்டாவது கொடைவள்ளலாக நாம் புரட்சித்தலைவர் எம்ஜிஆரைத் தான் பார்க்கிறோம். ஆனால் புரட்சித்தலைவர் அப்படி கொடை வள்ளலாக இருந்த மாதிரி விஜயகாந்தும் தன் வாழ்வில் நடந்து கொண்டார். பசியால் வருவோரின் பசியைப் போக்கினார். எப்பவும் தன் அலுவலகத்தில் அன்னதானம் கொடுப்பார்.
அதனால் தான் அவரைக் கருப்பு எம்ஜிஆர் என்றும் சொல்கின்றனர். திரையுலகில் மற்றவர்களுக்கு முன் உதாரணமாக பல நல்ல செயல்களைச் செய்தார். படப்பிடிப்பின்போது பாகுபாடு பார்க்காமல் அனைவருக்கும் சமமான ஒரே வகையான உணவுகளைப் பரிமாறச் செய்தார். தயாரிப்பாளர்களுக்கு நஷ்டம் உண்டாத வகையில் பல வெற்றிப்படங்களில் நடித்துக் கொடுத்தார்.
அந்தவகையில் ஸ்டண்ட் மாஸ்டர் ஜாக்குவார் தங்கம் கேப்டனைப் பற்றிய ஒரு புதிய தகவலைத் தெரிவித்துள்ளார். வாங்க என்னன்னு பார்க்கலாம்.
கேப்டன் விஜயகாந்தை 1978ல் நான் சந்திச்சேன். அப்பவே அவர் ஆபீஸ்ல தினமும் டிபன் சாப்பிட நிறைய பேரு கஷ்டப்பட்டு வருவாங்க. நான் எதுக்கு அண்ணே தினமும் சாப்பாடு போடுறீங்கன்னு கேட்டேன். அதுக்கு மிருகம் எல்லாம் எடுத்துதான் வாழும். மனுஷனுக்கு மட்டும் தான் கொடுத்து வாழ தெரியும்.
நாம மனுஷனா இருக்கோம்ல. கொடுத்து வாழ்வோம்னு சொன்னார். அதைக் கேட்டதம் நான் கண் கலங்கிட்டேன். புரட்சித்தலைவர் தான் இப்படி பண்ணினார்னு நான் சொன்னதும் அவரை மாதிரி வந்தா நானும் நல்லா பண்ணுவேன்னு சொன்னார் கேப்டன். அப்படி வந்து அதை செய்தும் காட்டினார் என்கிறார் ஸ்டண்ட் மாஸ்டர் ஜாக்குவார் தங்கம்.





