---Advertisement---

மகாநதி சீரியலுக்கு மூடுவிழா வைக்க போகிறதா விஜய் டிவி?

Published on: March 27, 2026
---Advertisement---

Mahanathi: விஜய் தொலைக்காட்சியின் காதல் சீரியல் என ரசிகர்களால் விமர்சிக்கப்படும் மகாநதி சீரியல் எண்ட் கார்ட் போடும் அளவுக்கு கதை நகர்ந்து வருவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. 

சுவாமிநாதன் லட்சுமி பிரியா ஜோடியாக நடிக்கும் திரைப்படம் மகாநதி. மகள்களின் வாழ்க்கை கதையாக தொடங்கி பின்னர் காவேரியின் வாழ்க்கையை மையமாக வைத்து ஒளிபரப்பாகி வருகிறது. இதில் அவர் கணவராக விஜய் அறிமுகம் லைக்ஸ் குவித்தது.

இதை தொடர்ந்து இருவரின் காதல் கல்யாணம் வாழ்க்கை மட்டுமே முக்கிய எபிசோட்களாக மாறி இருக்கிறது. இருவரும் காண்ட்ராக்ட் கல்யாணம் செய்து அடித்து பிடித்து கொண்டு காதலிக்க தொடங்கினார். இருவரும் ஒன்றாக வாழலாம் என முடிவெடுக்கும் போது குடும்பத்துகே விவரம் தெரிந்து இருவரையும் பிரித்தனர். 

பின்னர் காவேரி கர்ப்பமாகி குடும்பமே ஒப்ப்ய்க்கொண்டு வாழ வைக்க முடிவெடுக்கும் போது ராகவ் ஆக்ஸிடெண்ட் செய்ததில் காவேரிக்கு பழைய வாழ்க்கையெல்லாம் மறந்தது. இதை தொடர்ந்து சீரியல் 5 வருடம் கடந்து தற்போது இந்த ஜோடிக்கு ஒரு பெண் குழந்தையும் இருக்கிறது. 

காவேரி உயிரோடு இருப்பது தெரிந்து தற்போது விஜய் அவருக்கு பழைய நினைவுகள் வருவதற்காக போராடி கொண்டு இருக்கிறார். அந்த வகையில் தற்போது மீண்டும் ஒருமுறை இருவருக்கும் கல்யாணம் செய்து வைக்க ப்ளான் போட்டு வருகின்றனர். அது முடிந்ததும் சில மாதம் காவேரிக்கு நினைவு வராமல் இழுத்தடிப்பார்கள்.

பின்னர் அவர் சரியானால் கதையை முடிக்க வேண்டியது தான். வேறு ட்ராக்கே இல்லாமல் கதை சென்று கொண்டு இருக்கிறது. இப்படி அரைத்த மாவையே இழுத்தடித்து கொண்டு இருந்தால் கஷ்டமப்பா என ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.