---Advertisement---

மிகச்சிறந்த இசை அமைப்பாளனா வருவே… எம்எஸ்.வி.யை அன்றே கணித்த இசை அமைப்பாளர்.!

Published on: March 27, 2026
MSV
---Advertisement---

கலைஞருடைய பல பாடல்களுக்கு இசை அமைத்தவர் டி.ஆர்.பாப்பா. இவர் ஆரம்பத்தில் எம்எஸ்.சுப்புலட்சுமியின் கச்சேரிகளுக்கு வயலின் வாசித்தார். மிகச்சிறந்த வயலின் வித்வான் என்பதால்தான் எம்எஸ்.சுப்புலட்சுமி தான் நடித்த மீரா படத்தில் அவரைப் பயன்படுத்திக் கொள்ளும்படி அந்தப் படத்தின் இசை அமைப்பாளரிடம் பரிந்துரை செய்தார். அதன்காரணமாகத் தான் அந்தப் படத்தில் பணியாற்றக்கூடிய வாய்ப்பைப் பெற்றார் டி.ஆர்.பாப்பா. அந்தக் காலத்தில் வயலின்னா ஒண்ணு டிஆர்.பாப்பா. இன்னொன்னு யாருன்னா டி.கே.ராமமூர்த்தி.

இவர் மெல்லிசை மன்னர்களில் ஒருவர் தான். அந்தக் காலத்தில் டி.கே.ராமமூர்த்தியும், டிஆர்.பாப்பாவும் வயலின் வாசிக்காமல் ஒரு பாடல் பதிவு கூட நடந்தது இல்லை என்பதுதான் உண்மை. அந்தளவுக்கு பரபரப்பாக இருவரும் பணியாற்றிக் கொண்டு இருந்தார்கள். ஆரம்பத்தில் மாடர்ன் தியேட்டர்ஸ்ல பணியாற்றிய டிஆர்.பாப்பா சென்னைக்கு வந்ததும் ஜூபிடர் பிக்சர்ஸில் பணியாற்றத் தொடங்கினார்.

அப்போது ஜூபிடர் பிக்சர்ஸ் தயாரித்த பல படங்களுக்கு இசை அமைத்தவர் எஸ்.பி.வெங்கட்ராமன். அவரிடம் உதவியாளராகப் பணியாற்றியவர்தான் எம்எஸ்.விஸ்வநாதன். அவரது இசைத்திறமையை அந்தக் காலத்திலேயே அடையாளம் கண்டு கொண்டு மிகச்சிறந்த இசை அமைப்பாளனாக நீ ஒரு காலகட்டத்துல வருவே. அதுல எந்த சந்தேகமும் இல்லை. உங்கிட்ட அந்தளவுக்கு ஞானம் இருக்கிறது என்று பாராட்டியவர் டிஆர்.பாப்பா.

இசை அமைப்பாளரைப் பற்றி நான் நினைத்துக்கூட பார்க்காத காலகட்டத்துல தமிழ்சினிமாவில் ஒரு குறிப்பிடத்தக்க இசை அமைப்பாளராக நீ வருவாய் என பாராட்டியவர் டிஆர்.பாப்பா. அதை நான் என்றைக்கும் மறக்க முடியாது என பல பத்திரிகைப் பேட்டிகளில் பதிவு செய்துள்ளார் மெல்லிசை மன்னர் எம்எஸ்.விஸ்வநாதன்.