---Advertisement---

எம்எஸ்.விஸ்வநாதனின் குரு அவரா? அட இவ்ளோ நாளா தெரியாமப் போச்சே!

Published on: March 29, 2026
MS Vishwanathan
---Advertisement---

தமிழ்த்திரை உலகில் எம்ஜிஆர், சிவாஜி என இருபெரும் ஜாம்பவான்கள் நடித்த பெரும்பாலான படங்களுக்கு இசை அமைத்து பல வெற்றிகரமான பாடல்களைக் கொடுத்தவர் எம்எஸ்.விஸ்வநாதன். இவருடன் இணைந்து ராமமூர்த்தியும் இசை அமைத்தார். இவர்களை மெல்லிசை மன்னர்கள் என்று சினிமா உலகம் போற்றியது. இவருக்குப் பிறகு வந்தவர் தான் இசைஞானி இளையராஜா. மெல்லிசை மன்னர்களின் குருநாதர் யாருன்னு தெரியுமா? வாங்க பார்க்கலாம்.

ஒரு காலகட்டத்தில் தமிழிலும், தெலுங்கிலும் கொடிகட்டிப் பறந்த பாடல்கள்னா அது சி.ஆர்.சுப்புராமனின் இசையில் உருவான தேவதாஸ் படத்தின் பாடல்கள். துணிந்த பின் மனமே துயரம் கொள்ளாதே, உலகே மாயம், எல்லாம் மாயை தானா? ஆகிய என்றுமே மறக்க முடியாத பல பாடல்களுக்கு இசை அமைத்த பெருமைக்குரிய இசை அமைப்பாளர் தான் சிஆர்.சுப்புராமன்.

அவர் இசை அமைப்பாளர் ஆனதே ஒரு பெரிய கதை. செஞ்சுலெஷ்மி என்ற படத்துக்கு வயலின் வாசிக்க சென்ற கலைஞர் தான் சிஆர்.சுப்புராமன். இறுதியாக அந்தப் படத்தின் பாடல்கள் சிலவற்றுக்கு இசை அமைக்கக்கூடிய வாய்ப்பு அவரைத் தேடி வந்தது. அந்தப் பாடல்கள் எல்லாமே மிகப்பெரிய வெற்றி பெற்றன. அதன் காரணமாக இசை அமைப்பாளராக உருவானவர் தான் சி.ஆர்.சுப்புராமன்.

தமிழ்சினிமா உலகிலே கொடிகட்டிப் பறந்த இசை அமைப்பாளர்கள்னு மெல்லிசை மன்னர்கள் எம்எஸ்.விஸ்வநாதன், ராமமூர்த்தி, ஜி.கே.வெங்கடேஷ், கண்டசாலா போன்ற பலரும் இவருடைய சீடர்கள் தான் என்பது சி.ஆர்.சுப்புராமனின் தனிப்பெருமை. மேற்கண்ட தகவலை பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் தெரிவித்துள்ளார்.