Connect with us

100வது நாள் விழாவுக்கு அழைப்பு விடுத்த தயாரிப்பாளர்… மறுகணமே எம்ஜிஆர் சொன்ன வார்த்தை!

mgr

Cinema History

100வது நாள் விழாவுக்கு அழைப்பு விடுத்த தயாரிப்பாளர்… மறுகணமே எம்ஜிஆர் சொன்ன வார்த்தை!

அந்தக் காலத்தில் எல்லாம் திரை உலகில் 100வது நாள் படம் ஓடுவது என்பது சாதாரண விஷயம். பல முன்னணி கதாநாயர்களின் படங்கள் இப்படி வெற்றி விழாவைக் கொண்டாடும். அதில் ஒன்று தான் இந்த ஜல்லிக்கட்டு படம். சத்யராஜ், சிவாஜி இணைந்து நடித்த இந்தப் படத்தை சித்ரா லட்சுமணன் தயாரித்துள்ளார்.

படம் 100 நாள் ஓடி மாபெரும் வெற்றி பெற்றது. படத்துக்கான வெற்றி விழாவில் எம்ஜிஆர் கலந்து கொண்டார். எம்ஜிஆர் கலந்து கொண்ட கடைசி சினிமா நிகழ்ச்சியும் இதுதான். எப்படி கலந்து கொள்ள ஒப்புக்கொண்டார்னு பாருங்க.

ஜல்லிக்கட்டு படத்தின் பாராட்டு விழாவுக்கு அழைப்பு சொன்னதுமே எம்ஜிஆர் உடனே ஒத்துக்கிட்டாரா? இல்ல. முதல்ல வரலன்னு சொன்னாரான்னு ரசிகர் ஒருவர் பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணனிடம் கேள்வி கேட்டுள்ளார். அதற்கு அவர் சொன்ன பதில் இதுதான்.

எனக்கே இது ஆச்சரியமான விஷயம். ஒருநாள் காலையில புரட்சித்தலைவர் எம்ஜிஆரை நான், சத்யராஜ், என்னுடைய சகோதரர் சித்ரா ராமு ஆகிய மூவரும் சந்தித்தோம். ஜல்லிக்கட்டு படத்தின் 100வது நாள் விழாவுல நீங்க கலந்துக்கணும்னு கோரிக்கை வைக்கிறோம். என்னைக்கு ஜல்லிக்கட்டு படத்தின் 100வது நாள்னு கேட்டாரு. டிசம்பர் 5ந் தேதி 100 நாள் விழா வருதுன்னு நான் சொன்னதும் விழாவை வச்சிக்கோங்க.

நான் வர்றேன் என்று மறுகணமே சொல்லி விட்டார் எம்ஜிஆர். அப்படி உடனடியாக அவர் விழாவுக்கு வருவார்னு நாங்க மூவருமே கனவுல கூட நினைச்சிப் பார்க்கல அப்படிங்கறதுதான் உண்மை. இன்னைக்கு நினைச்சிப் பார்த்தா கூட அந்தளவுக்கு ஆச்சரியமா இருக்குது அந்த சம்பவம். அதற்கு முன்னால் இந்த மாதிரி தேதி கேட்ட உடனே எம்ஜிஆர் ஒப்புக்கொண்ட சம்பவங்கள் இருக்கான்னு எனக்குத் தெரியல என்கிறார் சித்ரா லட்சுமணன்.

To Top