Cinema History
பார்த்திபன், விக்னேஷ் சிவனெல்லாம் கிடையாது… அப்பவே கெத்து காட்டிய பிரபலம்!
தங்கள் திரைப்படத்தின் கதாநாயகியை மணந்து கொண்ட இயக்குனர்கள்னு பார்த்திபன், விக்னேஷ் சிவன்னு பலர் இருக்கிறார்கள். இவர்களுக்கெல்லாம் முன்னோடி யாருன்னா தமிழ்சினிமா உலகின் பிதாமகன் என்று சினிமா உலகம் இன்று வரை கொண்டாடிக் கொண்டு இருக்கின்ற இயக்குனர் கே.சுப்பிரமணியம். எஸ்.டி.சுப்புலட்சுமியை பவளக்கொடி படத்தில் அறிமுகப்படுத்தியவர் கே.சுப்பிரமணியம்.
அந்தப் படத்தில் பணியாற்றிக் கொண்டு இருக்கும்போதே சுப்புலட்சுமிக்கு இயக்குனரின் திறமையைத் தாண்டி அவருடைய நல்ல குணங்கள் பல தெரியவந்தது. கே.சுப்பிரமணியத்தைப் பொருத்தவரை திறமையான இயக்குனர் என்பதைத் தாண்டி பெண்கள் மீது மிகுந்த மதிப்பு கொண்டவராக இருந்தார். அந்த அவருடைய குணம் எஸ்.டி.சுப்புலட்சுமியைப் பெரிதும் கவர்ந்தது என்று தான் சொல்ல வேண்டும்.
அதனால அந்தக் கலை மேதையையே திருமணம் செய்து கொள்வது என்ற முடிவுக்கு வந்தார் எஸ்.டி.சுப்புலட்சுமி. இப்படி ஒரு முடிவை அவர்கள் எடுப்பதற்கு முன்னாலேயே அவர்கள் இருவரும் கூட்டாக சேர்ந்து ஒரு திரைப்பட நிறுவனத்தை நடத்திக் கொண்டு இருந்தார்கள். அதனால எஸ்டி.சுப்புலட்சுமி இயக்குனரிடம் தன் விருப்பத்தை சொன்னபோது மறுப்பேதும் சொல்லாமல் அவரை மணந்து கொண்டார் கே.சுப்பிரமணியம். மேற்கண்ட தகவலை பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் பகிர்ந்துள்ளார்.

நடிகரும் இயக்குனருமான பார்த்திபன் தனது முதல் பட நாயகி சீதாவை திருமணம் செய்து கொண்டார். புதிய பாதை படத்தில் தான் அவரை அறிமுகம் செய்தார். அதே போல விக்னேஷ் சிவன் தனது 2வது படமான நானும் ரௌடிதான் படத்தின் நாயகி நயன்தாராவை திருமணம் செய்து கொண்டார். அவர் இயக்கிய முதல் படம் போடா போடி. நடிகரும் இயக்குனருமான பார்த்திபன் தனது முதல் பட நாயகி சீதாவை திருமணம் செய்து கொண்டார். புதிய பாதை படத்தில் தான் அவரை அறிமுகம் செய்தார். அதே போல விக்னேஷ் சிவன் தனது 2வது படமான நானும் ரௌடிதான் படத்தின் நாயகி நயன்தாராவை திருமணம் செய்து கொண்டார். அவர் இயக்கிய முதல் படம் போடா போடி என்பது குறிப்பிடத்தக்கது.
