latest news
தகர டப்பா மூஞ்சி!.. விஜயை கலாய்த்த எழுத்தாளர்!. கோபத்தில் கையை வெட்டப்போன எஸ்.ஏ.சி..
கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த போது எனக்கு படிப்பு வேண்டாம்.. சினிமாவில்தான் நடிப்பேன் அதுதான் என் கெரியர் என விஜய் அடம்பிடித்ததார். ‘உனக்கு சினிமா வேண்டாம். அது மிகவும் கஷ்டம்’ என விஜயின் மனதை மாற்ற அவரின் தந்தை எஸ்,ஏ,சந்திரசேகர் முயற்சி செய்தார். ஆனால், விஜய் அடம் பிடிக்கவே நாளைய தீர்ப்பு என்கிற திரைப்படம் மூலம் தனது மகனை அறிமுகம் செய்து வைத்தார் எஸ்.ஏ.சி.
மகனை வைத்து யாரும் படம் எடுக்க முன்வர மாட்டார்கள் என்பதால் சொந்த காசை போட்டு படத்தை எடுத்தார். முதல் படமே பிளாப்..
அதன்பின் விஜயை வைத்து சில படங்களை இயக்கினார் எஸ்.ஏ.சி. ஆனால், எதுவும் பெரிசாக பேசப்படவில்லை. ஒருவழியாக விக்ரமன் இயக்கத்தில் விஜய் நடித்த பூவே உனக்காக திரைப்படம் விஜயை ரசிகர்களிடம் பிரபலப்படுத்தியது. அதன்பின் விஜயின் வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியவில்லை. ஒரு கட்டத்தில் ரஜினியை விடவும் அதிக சம்பளம் வாங்கும் நடிகராக மாறினார் விஜய். இந்நிலையில்,
விஜயிடம் 30 வருடங்களுக்கு மேல் பி.ஆர்.ஓவாக வேலை பார்த்த பி.டி செல்வகுமார் சமீபத்தில் ஊடகம் ஒன்றில் பேசியபோது ஒரு முக்கிய தகவலை பகிர்ந்து கொண்டார்.

நாளைய தீர்ப்பு படம் வெளியான போது எழுத்தாளர் சுஜாதா குமுதம் இதழில் அந்த படம் பற்றி விமர்சனம் எழுதியபோது ‘படத்தின் ஹீரோ விஜய்க்கு தகர டப்பா மூஞ்சி.. இவரை எல்லாம் யார் நடிக்க கூப்பிட்டார்?’ என்று ஏதோ எழுதிவிட்டார். அதைப் படித்து பார்த்து விஜய் கதவை சாத்திக்கொண்டு அழுது கொண்டிருக்கிறார்.. அதில் கோபமடைந்த எஸ்.ஏ.சி நேராக குமுதம் அலுவலகத்திற்கு சென்று ‘என் மகனைப் பற்றி அப்படி எழுதியது யாராக இருந்தாலும் அவரின் கையை வெட்டுவேன். ஜெயிலுக்கு போகவும் நான் தயார்’ என சண்டை போட்டார்..
சுஜாதா ஆடிப் போய்விட்டார்.. பெரிய சண்டையாகிவிட்டது.. அதன்பின் அமர்ந்து பேசி உங்கள் மகனைப் பற்றி இனிமேல் நல்ல விதமாகவும் எழுத மாட்டோம்.. நெகடிவாகவும் எழுத மாட்டோம்’ என குமுதம் சொல்லிவிட்டது’ என கூறியிருக்கிறார்.
