சமுகவலைதளங்களின் வளர்ச்சி எந்த அளவிற்கு நன்மையோ அதே அளவில் தீமைகளும் நிறைந்தே உள்ளன. அதிலும் தவறான கருத்துக்களை சந்திக்காத பிரபலங்களே இருக்க முடியாது.
இந்த நிலையில் சமூக வலைத்தளங்களில் வரும் நெகட்டிவ் கமெண்டுகள் குறித்து விக்னேஷ் சிவனிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்குப் பதிலளித்த அவர், நம்மைப் பற்றி தவறான மற்றும் மோசமான கருத்துக்களைப் பரப்புபவர்களை நம்மால் எதுவும் செய்ய முடியாது. ஏன் எம்.எஸ். தோனியையே திட்டி வலைத்தளங்களில் பதிவிடுகிறார்கள். அதனால், அதையெல்லாம் பொருட்படுத்தாமல் நமது வேலையைப் பார்த்துக் கொண்டு செல்ல வேண்டியதுதான் என்று கூறினார்.
தொடர்ந்து தனது மனைவி நயன்தாரா சந்திக்கும் விமர்சனங்கள் குறித்துப் பேசிய அவர், “நான் கூட பரவாயில்லை. நயன்தாராவை எல்லாம் எப்படி திட்டுவார்கள் தெரியுமா? நானும் நயனும் இதைபற்றி பலமுறை பேசிகொள்வோம் என்றார்.





