---Advertisement---

அரசன் படம் டிராப்பா?.. சிம்புவுக்கு பதில் வேறு நடிகரா?!.. நடப்பது என்ன?…

Published on: April 8, 2026
arasan
---Advertisement---

சிம்பு என்றாலே பஞ்சாயத்துதான். அவர் ஒரு படத்தில் நடித்தால் அந்த படத்திற்கு கண்டிப்பாக பிரச்சினை வரும். பெரும்பாலும் சிம்புவால்தான் அது நடக்கும். அதாவது சிம்புவுக்கும், தயாரிப்பாளர்களுக்கும் ஏழாம் பொருத்தம்தான். சிம்பு எப்போதும் தயாரிப்பாளர்களிடம் நல்ல முறையில் நடந்து கொள்ள மாட்டார்.

அதாவது உங்கள் தயாரிப்பில் ஒரு படத்தில் நடிக்கிறேன் என சொல்லி சில கோடிகள் அட்வான்ஸ் வாங்கி வாயில் போட்டுக்கொள்வார். ஆனால் நடித்துக் கொடுக்க மாட்டார். அதனால் கோபமடையும் அந்த தயாரிப்பாளர் தயாரிப்பாளர் சங்கம் மூலம் சிம்பு நடிக்கும் படத்திற்கு பிரச்சினை கொடுப்பார்.. இதனால் அந்த படத்தின் ஷூட்டிங் நிறுத்தப்படும்.. இதுதான் தற்போது அரசன் படத்திலும் நடந்திருக்கிறது..

கலைப்புலி தாணு தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்க சிம்பு நடிப்பில் அரசன் படம் சில மாதங்களுக்கு முன்பு துவங்கப்பட்டது. தயாரிப்பாளர் ஐசரி கணேசிடம் மூன்று படங்களில் நடித்துக் கொடுப்பதாக சொல்லி சில கோடிகள் அட்வான்ஸ் வாங்கினார் சிம்பு. ஆனால் ஒரு படம் மட்டும் நடித்துவிட்டு விலகிக் கொண்டார். 2வது படத்திற்காக சில கோடி செலவு செய்து போட்ட செட் எல்லாம் வீணாய்ப்போனது.

எனவே சிம்பு வாங்கிய பணம், அதற்கான வட்டி, செட் அமைத்ததால் வந்த நஷ்டம் என சிம்பு 10 கோடி வரை இழப்பீடு கொடுக்க வேண்டும் என ஐசரி கணேஷ் கேட்கிறார். ஆனால் சிம்பு அவ்வளவு என்னால கொடுக்க முடியாது என்கிறார். இதுதான் பஞ்சாயத்து. ஐசரி கணேஷை எப்படியாவது சமாளித்து படத்தை எடுத்துவிடலாம் என கலைப்புலி தாணு நினைத்தார். ஆனால், அது நடக்காமல் போனதோடு நிலைமை கை மீறி சென்றுவிட்டது.

ken karunas

இதையடுத்து தயாரிப்பாளர் சங்கம் மற்றும் திரைப்பட தொழிலாளர்கள் சங்கம் மூலம் காய்களை நகர்த்தி அரசன் ஷூட்டிங்கை நிறுத்திவிட்டார் ஐசரி கணேஷ். சிம்புவின் நடவடிக்கைகளால் கடுப்பான வெற்றிமாறன் கதையையும், செட்டையும் மாற்றி யூத் படத்தில் நடித்த கென் கருணாஸை வைத்து படமெடுக்கலாம் என்கிற முடிவுக்கு வந்துவிட்டதாக சொல்லப்படுகிறது.

ஏனெனில் சிம்பு பிரச்சனை எப்போது தீரும் என சொல்ல முடியாது. வடசென்னை படத்தில் வரும் அமீரின் ராஜன் கதாபாத்திரத்தை அடிப்படையாக வைத்துதான் அரசன் படத்தின் கதையை வெற்றிமாறன் எழுதியிருந்தார். ஆனால் தற்போது சிம்புவால் பிரச்சினை வந்ததால் அதையும் மாற்றி கென் கருணாஸை வைத்து இந்த படத்தை வெற்றிமாறன் இயக்குவார் என தெரிகிறது. அதேநேரம் சிம்புவின் பிரச்சினை முடிவுக்கு வந்தால் கதையில் மாற்றங்களை சிம்புவை மீண்டும் வெற்றிமாறன் உள்ளே கொண்டு வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.