லெஜண்ட் சரவணன் நடிப்பில் வெளியாக உள்ள லீடர் படத்தின் ப்ரீ-ரிலீஸ் நிகழ்ச்சியில் நடிகை ஐஸ்வர்யா, பத்திரிக்கையாளர் பிஸ்மியை கட்டிப்பிடித்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் குறித்து பலரும் பல்வேறு கருத்துக்களை பகிர்ந்த நிலையில், தற்போது ஐஸ்வர்யா அளித்துள்ள பேட்டியில் அதற்கான விளக்கத்தை வழங்கியுள்ளார்.
நடிகர் சூர்யா நடித்த ஆறு படத்தில் ‘சவுண்ட் சரோஜா’ கதாபாத்திரத்தின் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் ஐஸ்வர்யா. அதனைத் தொடர்ந்து வேல், சபரி, அபியும் நானும், புரிதி உள்ளிட்ட சில படங்களில் நடித்திருந்தாலும், அவருக்கு தொடர்ந்து பெரிய வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதனால் ஒரு கட்டத்தில் வாழ்க்கையை நடத்த சோப்பு விற்பனை செய்யும் நிலைக்கும் தள்ளப்பட்டார்.
பல ஆண்டுகள் போராட்டத்திற்கு பிறகு, மீண்டும் லீடர் படத்தின் மூலம் திரைத்துறைக்கு திரும்பும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த வருகையை கொண்டாடும் நேரத்தில் நடந்த அந்த கட்டிப்பிடிப்பு சம்பவம் தற்போது பேசுபொருளாகியுள்ளது.
இந்த விவகாரம் குறித்து பேசிய ஐஸ்வர்யா, “1990-ம் ஆண்டிலிருந்தே நான் மற்றும் பிஸ்மி நண்பர்கள். சுமார் 20 ஆண்டுகளுக்குப் பிறகு அவரை சந்திக்கும்போது, நான் எப்படி ஃபார்மலாக மட்டும் பேச முடியும்? அவர் என்னுடைய நெருங்கிய நண்பர். நண்பனை கட்டிப்பிடிப்பதில் எந்தத் தவறும் இல்லை” என்று தெளிவாக கூறினார்.
மேலும் தனது தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றியும் அவர் மனம் திறந்து பேசியுள்ளார். “என் அம்மா லக்ஷ்மி அளவுக்கு எனக்கு அழகும் இல்லை, நடிப்பும் வரவில்லை. பணம் இருக்கும் வரை நண்பர்கள் இருப்பார்கள், ஆனால் பணம் இல்லாத போது அவர்கள் விலகி விடுவார்கள். தனிமையில் வாழத் தொடங்கும் போது அது மிகவும் கஷ்டமாக இருக்கும். பிறகு அது பயமாக மாறும். ஆனால் அதற்கும் பழகிவிட்டால், அந்த தனிமையிலேயே ஒரு விதமான அமைதியும் மகிழ்ச்சியும் கிடைக்கும்” என்று கூறினார்.
2009-ம் ஆண்டிலிருந்து தனிமையான வாழ்க்கையை அனுபவித்து வருவதாகவும், வாழ்க்கையின் பல தருணங்களில் யாருடனும் எதையும் பகிர்ந்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார். “என் வாழ்க்கையை மட்டுமல்ல, கூடவே கழிப்பறையைக் கூட யாருடனும் பகிர்ந்து கொள்ள முடியாத அளவுக்கு தனிமை இருந்தது” என்ற அவரது உணர்ச்சிமிக்க கருத்து கவனம் ஈர்த்துள்ளது.
தற்போது ஆன்மீகத்திற்கும் யோகாவிற்கும் அதிக முக்கியத்துவம் அளித்து வருவதாகவும், சத்குருவின் வழியில் சென்று தனது மன அமைதியை கண்டுபிடிக்க முயற்சி செய்து வருவதாகவும் ஐஸ்வர்யா தெரிவித்துள்ளார்.





