">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
பொய் செய்திகளைப் பரப்புவேன்… உண்மையை ஒத்துக்கொண்ட கார்ட்டூனிஸ்ட் வர்மா!
அரசியல் தொடர்பாக பல பொய் செய்திகளைப் பரப்புவேன் என சர்ச்சைக் கார்ட்டூனிஸ்ட் வர்மா தெரிவித்துள்ளார்.
அரசியல் தொடர்பாக பல பொய் செய்திகளைப் பரப்புவேன் என சர்ச்சைக் கார்ட்டூனிஸ்ட் வர்மா தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் திருமா வளவன் பற்றி இழிவாக கார்ட்டூன் வரைந்து சர்ச்சையில் சிக்கினார் சுரேந்திரன் வர்மன் என்ற கார்ட்டூனிஸ்ட். இதையடுத்து அவர் மேல் புகார் கொடுக்கப்பட்டு கைதாகி தற்போது ஜாமீனில் வெளியாகியுள்ளார். இந்நிலையில் தற்போது அவர் இணையதள சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டி வைரலாகிக் கொண்டு இருக்கிறது.
அதில் நெறியாளர் கேட்கும் எந்த கேள்விக்கும் ஆதாரப் பூர்வமான பதிலை அளிக்காத அவர் கடைசியில் ஒரு கட்டத்தில் தான் பொய்யான செய்திகளை மக்களிடம் பரப்பினேன் என்பதை ஒத்துக்கொண்டுள்ளார். மேலும் அது பற்றி விளக்குகையில் எதிரணியினர் அதுபோல செய்வதால் தானும் அதுபோல செய்வதாக சொல்லியுள்ளார்.
இந்த பேட்டி தற்போது இணையத்தில் வைரலாகி வர்மாவுக்குக் கண்டனங்களும் கேலிகளும் எழுந்துள்ளன.