">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
இன்று முதல் திரையரங்குகளுக்கு அனுமதி – என்னென்ன நிபந்தனைகள் தெரியுமா?
வளைகுடா நாடுகளில் ஒன்றான துபாயில் இன்று முதல் திரையரங்குகளை திறக்க அந்நாட்டு அரசு அனுமதி வழங்கியுள்ளது.
வளைகுடா நாடுகளில் ஒன்றான துபாயில் இன்று முதல் திரையரங்குகளை திறக்க அந்நாட்டு அரசு அனுமதி வழங்கியுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உலகம் முழுவதும் திரையரங்குகள் மூடப்பட்டு 2 மாதங்களுக்கு மேலாகிறது. ஆனால் இன்னமும் வைரஸ் பாதிப்பு குறையாததால் எப்போது மீண்டும் திறக்கப்படும் என்று தெரியாமலேயே இருந்து வந்துள்ளது. இந்நிலையில் துபாய் அரசு பல நிபந்தனைகளோடு திரைப்படங்களை திறக்க அனுமதி அளித்துள்ளது.
- மொத்த இருக்கைகளில் 30 சதவிகிதம் மட்டுமே பார்வையாளர்களை அனுமதிக்க வேண்டும்
- 12 வயதிற்கு கீழ் உள்ளவர்களுக்கும் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் திரையரங்குகளில் அனுமதிக்கக் கூடாது.
- பார்வையாளர்கள் மாஸ்க் அணிந்திருக்கவேண்டும் டிக்கெட்கள் ஆன்லைன் மூலம் மட்டுமே வழங்கப்பட வேண்டும்.
- இரு பார்வையாளர்களுக்கு இடையில் 2 மீட்டருக்கு மேல் இடைவெளிக் கடைபிடிக்க வேண்டும்.
- ஒவ்வொரு காட்சிகளுக்குப் பின்னும் திரையரங்கத்தின் அனைத்து பகுதிகளும் கிருமி நாசினி தெளித்து சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.
தற்போது புதிய படங்கள் எதுவும் வெளியாகாத நிலையில் பழைய படங்களையே திரையரங்கங்கள் திரையிட்டு வருகின்றன. இதையடுத்து பல நாடுகளும் இதுபோல் மீண்டும் தியேட்டர்களை திறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.