எனக்கு அவர் மீதுதான் சந்தேகம்: சென்னை போலீசில் புகார் அளித்த ஸ்ரீரெட்டி

சின்னத்திரை மேலாளர் ஒருவர் மீது தனக்கு சந்தேகம் இருப்பதாக சர்ச்சைக்குரிய நடிகை ஸ்ரீரெட்டி சென்னை போலீசில் புகார் அளித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

c7432db1e80be09e9e59ae7f69fb93e1

சின்னத்திரை மேலாளர் ஒருவர் மீது தனக்கு சந்தேகம் இருப்பதாக சர்ச்சைக்குரிய நடிகை ஸ்ரீரெட்டி சென்னை போலீசில் புகார் அளித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

கோலிவுட், டோலிவுட் பிரமுகர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டுக்களை அடுக்கடுக்காக கூறி அதிர வைத்த நடிகை ஸ்ரீரெட்டி தற்போது சென்னை கோயம்பேடு அன்பு நகரில் வசித்து வருகிறார் 

இந்த நிலையில் இன்று அவர் சென்னை போலீசில் ஒரு புகார் மனுவை கொடுத்துள்ளார் அந்த மனுவில், ‘தன் சொகுசு காரை, வீட்டு வளாகத்தில் நிறுத்தி வைப்பது வழக்கம் என்றும், அவ்வாறு, நிறுத்தப்பட்ட காரை, மர்ம நபர்கள் உடைத்து சேதப்படுத்தி இருப்பதாக தெரிவித்துள்ளார்.

மேலும், அந்த புகாரில் சின்னத்திரை நிகழ்ச்சி மேலாளராக உள்ள மனோஜ் என்பவர் மீது தனக்கு சந்தேகம் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஸ்ரீரெட்டியின் புகாரை அடுத்து இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள கோயம்பேடு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *