">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
சிங்கக்குட்டி பொறந்துட்டான்…. மறைந்தும் மறுபிறவி எடுத்தார் நடிகர் சேது – தந்தை உருக்கம்!
மறைந்த நடிகரும் மருத்துவருமான சேதுராமனுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.
கண்ணா லட்ட திண்ண ஆசையா படத்தின் மூலம் அறிமுகமான நடிகர் சேதுராமன் சந்தானத்தின் நெருங்கிய நண்பர். அதன் பின்னர் வாலிபராஜா உள்ளிட்ட சில படங்களில் நடித்த அவர் அதன் பின்னர் தனது தொழிலான மருத்துவத்தில் தீவிரமாக ஈடுபட்டு வந்தார்.
அவர் கடந்த மார்ச் மாதம் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். இது திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியடைந்துள்ள நிலையில் நேற்று அவரது மனைவிக்கு அப்போலோ மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்துள்ளது.
சேது மரணிக்கும் போது அவரது மனைவி 4 மாத கர்ப்பிணியாக இருந்தார். இந்நிலையில் மனைவியின் வயிற்றில் மகனாக மறுபிறவி எடுத்துள்ளதாக அவரது குடும்பத்தினர் ஆனந்த கண்ணீரில் மகிழ்ந்துள்ளனர். இது குறித்து சேதுவின் தந்தை ” சேதுவிற்கு சிங்க குட்டி பொறந்திருக்கான் என்று மகிழ்ச்சியாக கூறியுள்ளார்.