">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
எங்க வந்து யாராண்ட… பாலிவுட் படத்தை தூக்கி எறிந்துவிட்டு வந்த கீர்த்தி சுரேஷ் – காரணம் இதோ!
தமிழ் சினிமாவில் “இது என்ன மாயம்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் கீர்த்தி சுரேஷ். இதனையடுத்து ‘ரஜினி முருகன், தொடரி, ரெமோ, பைரவா, சாமி 2’ என முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்தார். தமிழ் மட்டுமின்றி, சில தெலுங்கு மற்றும் மலையாள படங்களிலும் கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கிறார்.
தெலுங்கில் இவரது நடிப்பில் வெளியான “மகாநடி” படம் கீர்த்திக்கு பேரும் , புகழும் பெற்றுத்தந்ததுடன் சிறந்த நடிகையாக அடையாளம் காட்டியது. இந்த படத்திற்காக கீர்த்தி சுரேஷிற்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது வழங்கி கௌரவித்தனர். அதன் பின்னர் மார்க்கெட்டின் உச்சத்தில் தொடர்ந்து இருந்து வருகிறார்.
இதையடுத்து வாய்ப்புகள் குவிய கடந்த வருடம் கீர்த்தி சுரேஷ் பாலிவுட் பக்கம் தாவினார். அங்கு போனி கபூர் தயாரிப்பில் சையது அப்துல் இப்ராகிமின் வாழ்க்கையை படத்தில் கீர்த்தி ஒப்பந்தமானார். ஆனால், படக்குழுவினர் கீர்த்தியிடம் ஒரு காட்சியில் பிகினி உடை அணிந்து நடிக்க வேண்டும் என கூறியுள்ளனர். அதற்கு கீர்த்தி நோ… நான் அதெல்லாம் போடமாட்டேன் ரொம்ப செக்ஸியா இருக்கும் என கூறி அந்த படத்தில் இருந்தே வெளியேறிவிட்டாராம். கீர்த்தியின் இந்த கட்டுப்பாட்டை தமிழ் சினிமா ரசிகர்கள் மார்தட்டி வரவேற்கின்றனர்.