">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
அதர்வாவுடன் காதல், கெளதம் கார்த்தியுடன் கல்யாணம் – புலம்பி தள்ளும் நடிகை!
நடிகர் கவுதம் கார்த்திக்குடன் சில படங்களில் நடித்தவர் பிரியா ஆனந்த். அவர்கள் இருவருக்கும் இடையே காதல் இருப்பதாக சில வருடங்களுக்கு முன்பே கிசுகிசுக்கப்பட்டது. இது குறித்து அப்போதே பேட்டியளித்த பிரியா ஆனந்த் “நண்பர் காதலராக மாறலாம்..காதல் நண்பராகவும் மாறலாம்.. கவுதம் என் நண்பரா, காதலரா என்பதை காலம்தான் தீர்மானிக்கும்” என கூறியிருந்தார்.
இந்நிலையில் தற்ப்போது மீண்டும் நடிகை பிரியா ஆனந்த் நடிகர்கள் அதர்வா மற்றும் கௌதம் கார்த்தி என இரண்டு நடிகர்களுடன் ஒரே சமயத்தில் கிசு கிசுக்கப்பட்டு வருகிறார். அதுவும் அதர்வாவை காதலித்து வருவதாவும், கௌதம் கார்த்திகை திருமணம் செய்ய போவதகவும் சமூகவலைத்தளங்களில் பேச்சுக்கள் அடிபட்டு வந்தது. இதற்கு பிரியா ஆனந்த், இருவரும் நல்ல நண்பர்கள். இருவருக்கும் நல்ல தோழியாக நான் இருக்கிறேன் வந்தந்திகளை நம்பாதீர் என கூறி முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
வாமனன் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை ப்ரியா ஆனந்த் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் தனது நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார். தமிழில் கடைசியாக துருவ் விக்ரம் நடிப்பில் வெளியான ஆதித்ய வர்மா படத்தில் இரண்டாவது ஹீரோயினாக நடித்திருந்தார். தற்போது 33 வயதாகியும் ஹீரோவுடன் மரத்தை சுற்றி டூயட் ஆடிவரும் கதாபாத்திரங்களையே தேர்வு செய்து நடித்து வருகிறார்.