Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

வாக்கு எண்ணிக்கையில் சமமான வாக்கு… தபால் வாக்கிலும் சமம் – வித்தியாசமான முறையில் வெற்றி பெற்ற வேட்பாளர் !

உள்ளாட்சித் தேர்தலில் ஊராட்சி வார்டுக்குப் போட்டியிட்ட இரு வேட்பாளர்கள் சமமான வாக்குகள் பெற்றதால் குலுக்கல் முறையில் வெற்றியாளர் தேர்வு செய்யப்பட்டார்.

9b16b528a35a547dbd804ecb31053258-1

உள்ளாட்சித் தேர்தலில் ஊராட்சி வார்டுக்குப் போட்டியிட்ட இரு வேட்பாளர்கள் சமமான வாக்குகள் பெற்றதால் குலுக்கல் முறையில் வெற்றியாளர் தேர்வு செய்யப்பட்டார்.

நேற்று அறிவிக்கப்பட்ட உள்ளாட்சித் தேர்தல் முடிவில் பல ஆச்சர்யமான வெற்றி தோல்விகள் நடந்துள்ளன. இந்நிலையில் அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டத்தை அடுத்துள்ள குருவாலப்பர்கோவில் ஊராட்சியில் வார்டு எண் 9 க்கு ரம்யா, ராஜலட்சுமி, சுகந்தி ஆகிய மூவரும் போட்டியிட்டனர். இவர்களுக்கு கட்டில், சீப்பு, சாவி ஆகிய சின்னங்கள் ஒதுக்கப்பட்டன. இந்த வார்டில் உள்ள 348 வாக்குகளில் 294 வாக்குப் பதிவானது. 4 தபால் ஓட்டுகளையும் சேர்த்து 298 வாக்குகள் பதிவானது.

வாக்கு எண்ணிக்கையின் சுகந்தி 64 வாக்குகளைப் பெற்றார். ரம்யா 112 வாக்குகளும், ராஜலட்சுமி 112 வாக்குகளும் பெற்று சமநிலையில் இருந்தனர். 6 ஓட்டுகள் செல்லாத ஓட்டுகளாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து வெற்றியை நிர்ணயிக்கும் சக்தியை தபால் வாக்குகள் பெற்றன.

இதையடுத்து நேற்றிரவு எண்ணப்பட்ட 4 தபால் வாக்கிலும் ரம்யா மற்றும் ராஜலட்சுமி ஆகிய இருவரும் தலா 2  வாக்குகள் பெற்றதால் இருவரும் 114 வாக்குகள் வாங்கினர். இதனால் மீண்டும் குழப்பம் உண்டானது. இதன் பின்னர் இன்று காலை வட்டார ஆட்சியர் இரு வேட்பாளர்களின் சம்மதத்துடன் குலுக்கல் முறையில் வேட்பாளரைத் தேர்ந்தெடுக்கும் முடிவை எடுத்தார்.

அதன் படி வேட்பாளர்கள் இருவரின் பெயர்களும் சீட்டுகளில் எழுதி குலுக்கல் முறையில் ஒரு சீட்டு எடுக்கப்பட்டது. அதில் ரம்யா என்ற வேட்பாளரின் பெயர் வர அவரையே வெற்றி பெற்ற வேட்பாளராக அறிவித்தார்.

author avatar
adminram
பி.எஸ்.ஸி. பட்டதாரியான இவர் 17 ஆண்டுகளாக ஊடகத்துறையில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, வணிகம் மற்றும்அரசியல் குறித்த செய்திகளை வழங்கி வந்தார். தற்போது கடந்த 10 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் செய்தி மர்றும் தொழில்நுட்பம் சார்ந்த பணிகளை கவனித்து வருகிறார்.
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top