கணவனை எதிர்த்துப் போட்டியிட்ட மனைவி … ஆனால் வெற்றி கொழுந்தனாருக்கு ! – உள்ளாட்சித் தேர்தல் சுவாரஸ்யம் !

திருப்பூரில் குண்டடம் ஊராட்சித் தேர்தலில் அண்ணன், தம்பி, அண்ணனின் மனைவி ஆகிய 3 பேர் போட்டியிட்ட தேர்தல் முடிவில் தம்பி வெற்றி பெற்றுள்ளார்.

370498db368ef3ddfbad91f9df80dd4f

திருப்பூரில் குண்டடம் ஊராட்சித் தேர்தலில் அண்ணன், தம்பி, அண்ணனின் மனைவி ஆகிய 3 பேர் போட்டியிட்ட தேர்தல் முடிவில் தம்பி வெற்றி பெற்றுள்ளார்.

திருப்பூர், குண்டடம் ஒன்றியத்துக்கு உட்பட்ட சடையா பாளையம் கிராம ஊராட்சி தேர்தல் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக அப்பகுதி மக்களால் கவனிக்கப்பட்டது. காரணம் அதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் போட்டியிட்டனர்.

அதில் பெரியசாமியும், அவரின் மனைவி லஷ்மியும், பெரியசாமியின் தம்பி ஈஸ்வரனும் போட்டியிட்டனர். இதில் தேர்தல் முடிவில் பெரியசாமியின் தம்பி ஈஸ்வரன் 2147 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். பெரியசாமி 1986 வாக்குகள் பெற்றார். அவரின் மனைவி 147 வாக்குகள் பெற்றார். தனது மனைவியின் வாக்குகளே பெரியசாமியின் வெற்றியை தடுத்து நிறுத்துவிட்டது.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *