">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
எஸ்.பி.பி உடல்நிலை பற்றி லேட்டஸ்ட் தகவலை பகிர்ந்த எஸ்.பி.சரண்
எஸ்பிபியின் உடல்நிலை குறித்த சமீபத்திய தகவல்
தமிழ் சினிமாவின் மூத்த பாடகர்களில் ஒருவரான எஸ் பி பாலசுப்ரமண்யம் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்பது அனைவரும் அறிந்ததே. சமீபத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட இந்தியாவின் முன்னணி சினிமா பாடகர்களில் ஒருவரான எஸ்பி பாலசுப்பிரமணியன் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இவரது உடல் நிலை குறித்து மருத்துவமனை கடந்த சில நாட்காக தொடர்ந்து பல திடுக்கிடும் தகவலை வெளியிட்டு வந்தனர். எக்மோ கருவிகள் மூலம் செயற்கைளை சுவாசம் கொடுக்கப்பட்டு வந்தது. இதையடுத்து அவர் உடல் நலம் தேறி கொரோனா தொற்றிலிருந்து விடுபட திரைபிரபலங்கள் அனைவரும் ஒன்று கூடி பிரார்த்தனை செய்தனர். அதன்பின் அவரின் உடல் நிலை சீராக உள்ளதாக கூறப்பட்டது.
ஆரம்பத்தில் இருந்தே எஸ்பி பியின் உடல் கன்டீஷன் குறித்து அவ்வப்போது தெரிவித்து வரும் மகன் எஸ்பி சரண் தற்ப்போது அவரை குறித்து ட்விட் செய்துள்ளார். அந்த பதிவில், “இன்றைய நாளின் ( 2/9/20 ) எஸ்.பி.பிக்கு முழுமையாக நினைவு திரும்பியிருக்கிறது. பிசியோதெரபி சிகிச்சைக்கு நல்ல ஒத்துழைப்பு அளிக்கிறார். அத்துடன் தொடர்ந்து மருத்துவர்களின் கண்காணிப்பில் இருக்கிறார். கொஞ்சம் கொஞ்சமாக அவரது உடல்நிலை முன்னேறி வருகிறது.” என தெரிவுபடுத்தியுள்ளார்.
2/9/20 #SPB Health update
STABILITY AND SLOW PROGRESS CONTINUES ON THE PATH TO RECOVERY.— S. P. Charan (@charanproducer) September 2, 2020