Connect with us

Bigg Boss

பிக்பாஸ் போட்டியில் இருந்து வெளியேறிய நமீதா மாரிமுத்து..? அதிர்ச்சியில் காத்திருக்கும் ரசிகர்கள்..!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய நிகழ்ச்சிக்கான ப்ரேமே வெளியாகியுள்ளது. அதில், 18 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்த போட்டியில் 17 பேரை மட்டுமே காண முடிந்தது. நமீதா மாரிமுத்து காணவில்லை என்பதால் ரசிகர்கள் அதிர்ச்சி…

இன்றைய நிகழ்ச்சிக்கான ப்ரேமே சற்று முன் வெளியானது. அதில், வார இறுதி நாள் என்பதால், கமல் தொகுத்து வழங்க இருக்கிறார். அப்போது டிவி அமர்ந்திருக்கும் போட்டியாளர்கள் மத்தியில் நமீதா மாரிமுத்தைக் காணவில்லை. மேலும், போட்டியாளர்கள் முகத்தில் சோகம் நிறைந்து காணப்படுகிறது. கடந்த சீசனில் மதுமிதா சொல்ல முடியாத காரணங்களால் வெளியேறினார். அப்போது பிக்பாஸ் குரல் மட்டும் மதுமிதா இந்த போட்டியிலிருந்து வெளியேறிவிட்டார் என அறிவிக்கப்பட்டது.

அதேபோல், நமீதாவும் சொல்ல முடியாத காரணங்களால் வெளியேறி இருப்பாரோ என பிக்பாஸ் ரசிகர்கள் புலம்பித் தவிக்கின்றனர். முதல் திருநங்கையாக பிக்பாஸ் வீட்டிற்குள் அடியெடுத்து வைத்து அனைவரிடமும் எளிதாக பழகி இருந்து வந்த நிலையில், அவர் வெளியேறியது ரசிகர்களுக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், கதை சொல்லட்டுமா டாஸ்கில் கூட சமூகத்தில் தனக்கு நேர்ந்த கொடுமைகளைத் தைரியமாக எடுத்துக் கூறி போட்டியாளர்களிடமிருந்தும், பார்வையாளர்களிடமிருந்தும் பல லட்ச இதயங்களை வென்றவர் இன்று போட்டியிலிருந்து வெளியேறினார். வெளியேறினாரா இல்லையா என்பது அடுத்த ப்ரேமோவிலே அல்லது நிகழ்ச்சியை பார்க்கும் போது தெரிய வரும்.

 

 

 

author avatar
adminram
பி.எஸ்.ஸி. பட்டதாரியான இவர் 17 ஆண்டுகளாக ஊடகத்துறையில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, வணிகம் மற்றும்அரசியல் குறித்த செய்திகளை வழங்கி வந்தார். தற்போது கடந்த 10 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் செய்தி மர்றும் தொழில்நுட்பம் சார்ந்த பணிகளை கவனித்து வருகிறார்.
Continue Reading

More in Bigg Boss

To Top