இதனால்தான் அண்ணாத்த படத்தில் நடித்தேன்! – ரஜினி வெளியிட்ட ஆடியோ…

Published on: November 15, 2021
rajini
---Advertisement---

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினி, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா உள்ளிட்ட பலரும் நடித்து கடந்த 4ம் தேதி வெளியான திரைப்படம் அண்ணாத்த. இப்படம் எதிர்மறையான விமர்சனங்களை பெற்றாலும் குடும்ப ரசிகர்கள் மற்றும் பெண்களுக்கு இப்படம் பிடித்துள்ளதால் தியேட்டரில் வசூலை ஈட்டி வருகிறது.

இந்நிலையில், இப்படத்தில் நடிக்க முடிவெடுத்தது பற்றி ஹீட் ஆப்பில் பேசியுள்ள ரஜினி ‘பேட்ட படம் வெளியான போது விஸ்வாசம் படமும் வெளியானது. இரண்டு படமும் செம் ஹிட். எனவே விஸ்வாசம் படத்தை பார்க்க விரும்பினேன். அப்படம் பார்த்து இடைவேளை முடியும் போது இப்படம் இவ்வளவு வெற்றிபெற அப்படி என்ன இருக்கிறது என யோசித்தேன். ஆனால், இடைவேளைக்கு பின் செல்ல செல்ல மகள் – தந்தை செண்டிமெண்ட் காட்சிகள் என்னை நெகிழ வைத்தது. படத்தின் இறுதிகாட்சியும் சிறப்பாக இருந்தது. படம் முடிந்த பின் என்னை அறியாமல் கைதட்டி விட்டேன்.

petta

அதன்பின் சிவாவை நேரில் அழைத்து பாராட்டினேன். எனக்கு ஏதேனும் கதை இருக்கிறதா? ஆனால், சூப்பர் ஹிட் ஆக வேண்டும் எனக்கேட்டேன். அதற்கு அவர் ‘உங்களை வைத்து ஹிட் கொடுப்பது சுலபம் சார்’ என்றார். அவர் கூறியது எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. எப்படி எனக்கேட்டேன்.

siva

முதலில் நல்ல கதையில் நீங்கள் இருக்க வேண்டும். தளபதி, முத்து, படையப்பா, பாட்ஷா என அனைத்தும் நல்ல கதை. அதில் நீங்கள் இருந்தீர்கள். அடுத்து நீங்கள் கிராமத்து கதையில் நடித்து பல வருடங்கள் ஆயிற்று. இரண்டும் இணைந்தால் படம் கண்டிப்பாக ஹிட் ஆகும் என அவர் கூறினார். என்னிடம் எந்த இயக்குனரும் அப்படி கூறியதில்லை. அதுவே எனக்கு பிடித்திருந்தது.

annaatthe

அதன்பின் 20 நாட்கள் கழித்துவந்து என்னிடம் அண்ணாத்த படத்தின் கதையை இரண்டரை மணி நேரம் கூறினார். அவர் கதை கூறி முடித்த பின் அவரின் கையை பிடித்துக்கொண்டேன். இதை அப்படியே படமாக எடுங்கள் என்றேன். கண்டிப்பாக எடுப்பேன் எனக்கூறி உறுதி அளித்தார். இப்படம் எடுக்கும்போது எவ்வளவோ பிரச்சனை. எல்லாவற்றையும் பொறுமையாக கையாண்டு படத்தை எடுத்தார். அவர் கூறியது போலவே பெண்கள், ரசிகர்கள் என எல்லோருக்கும் இப்படம் பிடித்து பெரிய வெற்றியை பெற்றுள்ளது.

என ரஜினி அந்த ஆடியோவில் பேசியுள்ளார்.

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment