கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்துள்ளது. தமிழகத்தில் தினசரி பாதிப்பு 750 ஆக இருந்த நிலையில், நேற்று ஒரு நாளில் 2700 பேர் கொரொனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, அரசு இதை கட்டுப்படுத்தும் பணியில் இறங்கியுள்ளது.
இந்நிலையில், நடிகர் அருண் விஜய் கொரோனா பாதிப்பில் சிக்கியுள்ளார். இவர் தற்போது இயக்குனர் ஹரி இயக்கிய யானை படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது.
Also Read
ஏற்கனவே, கமல்ஹாசன், வடிவேலு ஆகியோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் மீண்டது குறிப்பிடத்தக்கது.



