“ரோஜா கூட்டம்” திரைப்படம் வாயிலாக தமிழ் திரைப்பட உலகிற்கு அறிமுகமானார் நடிகர் ஶ்ரீகாந்த். முதல் படத்திலேயே சாக்லேட் பாய் இமேஜ் பெற்ற இவர் தொடர்ந்து பல படங்கள் நடித்தாலும் பெரிய வெற்றி இல்லாமல் திணறி வருகிறார்.
இவர் தற்போது இயக்குநர் “மணிபாரதி” இயக்கத்தில் “தி பெட்” என்று பெயரிடப்பட்ட திரில்லர் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ஶ்ரீகாந்த் ஜோடியாக நடிகை “ஸ்ருஷ்டி டாங்கே” நடித்திருக்கிறார். இவரும் வெற்றிக்காக போராடி வருகிறார். இந்த படம் தனக்கு திருப்புமுனையாக அமையும் என நம்புகிறார்.
Also Read

தற்போது “தி பெட்” திரைப்படத்தின் போஸ்டர்கள் வெளியாகி, படத்தின் மீதான எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது.
இந்த படத்தின் இயக்குநர், ஹீரோ மற்றும் ஹீரோயின் ஆகிய மூவரும் “கம் பேக்” தரும் வகையில் கடும் உழைப்பை கொடுத்து உள்ளதாக படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது.



