Connect with us
thamarai

Bigg Boss

என்ன வாழ வச்ச வீடு!…எவிக்‌ஷன் ஆன பின் ஃபீலிங் காட்டிய தாமரை…உருகிய ரசிகர்கள்…

கமல்ஹாசன் நடத்தும் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்த முறையும் பல்வேறு துறைகளை சார்ந்த கலைஞர்கள் பிக்பாஸ் வீட்டில் விளையாடி வருகின்றனர்.

இதில், நாட்டுப்புற கலைஞர் தாமரையும் ஒருவர். இவர் நாடகக்கலை அழிந்துவிடக்கூடாது என சிறப்பாக செயல்பட்டு வரும் ஒரு கலைஞர் ஆவார். துவக்கம் முதலே பிக்பாஸ் வீட்டில் தனது தனித்திறமையை வெளிப்படுத்தி வந்த ஒரு சிறப்பான போட்டியாளராக அவர் இருந்தார். பிரியங்காவுடன் சண்டை போட்டாலும் அவர் யாரின் அதிருப்தியையும் பெறவில்லை.

thamarai

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 98வது நாளான நேற்று எவிக்‌ஷன் பிராசஸில் ஒருவர் வெளியேற வேண்டிய நிலையில் திடீர் திருப்பமாக தாமரை வெளியேறுகிறார் என கமல்ஹாசன் அறிவித்தார். பிக்பாஸ் வீட்டில் ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவை பெற்ற போட்டியாளராக தாமரை இருந்தார்.

பிக்பாஸ் வீட்டிற்கு செல்ல அவர் ஏன் முடிவெடித்தார் என்பதை ஒருமுறை கூறிய அவர் ‘நான் இங்கு வந்தால் என் மூலம் நாடக உலகிற்கு பெருமையாக இருக்கும். மேலும், பிக்பாஸ் வீட்டிற்கு வந்தால் கஷ்டம் அனைத்தும் தீரும் என சொன்னார்கள்’ என பதில் கூறியிருந்தார். thamaraie\அதோடு, சிறுவயதில் என்னால் விளையாட முடியவில்லை. ஆசைப்பட்டதை சாப்பிட முடியவில்லை. இங்கு வந்துதான் நன்றாகே சாப்பிடுகிறேன். சந்தோஷமாக இருக்கிறேன் எனக்கூறு ரசிகர்களை உருக வைத்த போட்டியாளர் அவர்.

thamarai

நேற்று அவர் வெளியேறுவதாக அறிவித்தாலும் ‘நான் ஜெயிச்சிடேன்’ எனக்கூறியதோடு, ‘என்ன வாழவெச்ச வீடு இது’ என அழுதுகொண்டே கூறினார். மேலும், எல்லோருக்கும் வாழ்த்து கூறிவிட்டு புறப்பட்டு சென்றார்.

அவருக்கு வாழ்த்து சொன்ன பிக்பாஸ் பிக்பாஸ் வீட்டில் அவர் அடிக்கடி கூறிவந்த ‘போக மாட்டேன்’ என்பதை சத்தமாக கூறிவிட்டு செல்லுங்கள்’ எனக்கூற அதுபோலவே அவர் கூறிவிட்டு சென்றார்.

author avatar
சிவா
முதுகலை பட்டதாரியான இவர் 12 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல்,வணிகம் மற்றும் சமூகம் சார்ந்த கட்டுரைகளை வழங்கி வருகிறார். தற்போது கடந்த 12 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் செய்தி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Continue Reading

More in Bigg Boss

To Top