Connect with us

Cinema News

வடிவேலுவை ஆட வைத்தால் 1 கோடி சம்பளமாம்.! இதுதான் பம்பர் ஆஃபர்.!

நீண்ட வருடமாக எப்போது என்ட்ரி கொடுப்பார் என்று ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர் என்றால் அது வடிவேலு-காகத்தான் இருக்கும். இவர் அவ்வப்போது சில படங்களில் தலை காட்டினாலும் அந்த காலம் போல சூறாவளியாய் சுற்றி சுற்றி நடித்து வந்த வடிவேலுவை காணவில்லை.

தற்போது மீண்டும் தனது பார்முக்கு வந்து, அடுத்தடுத்த படங்களை புக் செய்து வருகிறார் வடிவேலு. இவர் நடிப்பில், தற்போது நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் எனும் திரைப்படம் தயாராகி வருகிறது. இந்த படத்தை சுராஜ் இயக்குகிறார்.

இதையும் படியுங்களேன் – வலிமை ரிலீஸ் தேதியில் இப்படி ஒரு சோக நிகழ்வா.?! அதிர்ந்துபோன ரசிகர்கள்.!

இப்படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்க உள்ளது. இந்த படத்தில் பாடல் ஒன்றை அவரே பாடியும் உள்ளாராம். அதில், நடனமைக்க பிரபல நடன இயக்குனர் இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் பிரபு தேவாவிடம் பேசப்பட்டுள்ளதாம்.

பிரபு தேவா, பிஸியான நடிகர், பாலிவுட் முன்னணி இயக்குனர்களில் ஒருவர். ஏதாவது பெரிய நடிகர் படமென்றால் மட்டும் ஒரு சில பாடல்களுக்கு நடனம் அமைத்து கொடுப்பார். அவர் எப்படி வடிவேலுவுக்கு நடனமைக்க ஒத்துக்கொண்டார் என கோலிவுட் ஆச்சர்யத்தில் இருக்கிறது.

அதாவது அந்த ஒரு பாடலுக்கு மட்டும் பிரபு தேவாவுக்கு 1 கோடி ரூபாய் சம்பளமாக பேசப்பட்டுள்ளதாம். அதனால் தான் அவர் ஒத்துக்கொண்டார் என கூறப்படுகிறது.

 

author avatar
Manikandan
Continue Reading

More in Cinema News

To Top