Connect with us

Cinema News

கால்கடுக்க காத்திருந்த கமல்.! கோடி கோடியாய் கொடுப்பவராச்சே நின்னுதானே ஆகனும்.!

உலகநாயகன் கமலஹாசன் ஒரு விழாவிற்கோ அல்லது ஏதேனும் துக்க காரியங்களுக்கு என்றாலும் அவரது உதவியாளர்கள் அதற்கு முன்னரே அந்த இடத்திற்கு சென்று, கமல் வருவதற்கான ஏற்பாட்டை செய்து முடிப்பர். அவர் வந்தவுடன் என்ன மரியாதை செய்ய வேண்டுமோ அதை செய்து விட்டு உடனே அந்த இடத்தை காலி செய்து விடுவார்.

 

 

அந்த அளவுக்கு தான் அவர் நடந்துகொள்வார். தன்னை பார்த்து கூட்டம் கூடி அதனால், ஏதேனும் இடையூறு வந்துவிட கூடாது என பெரிய நட்சத்திரங்கள் வழக்கமாக நடந்துகொள்வதுதான் இது. ஆனால் சில நாட்களுக்கு முன்னர் நடைபெற்ற ஓர் கோலாகலம் திருமண நிகழ்ச்சியில் அதிக நேரம் கமல்  செலவழித்தது கோடம்பாக்கத்தினர் மத்தியில் பேசு பொருளானது.

அதாவது, சினிமா பைனான்சியர் தயாரிப்பாளரான அன்பு செழியன் அவர்களது மகள் திருமண விழா சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. இதில் கோடம்பாக்கத்தினர் பலர் இதில் கலந்து கொண்டனர். ரஜினிகாந்த், கமல்ஹாசன், கலைப்புலி தாணு, போனிகபூர், சிம்பு, சிவகார்த்திகேயன் என லிஸ்ட் பெருசா போனது. அந்த அளவுக்கு பிரபலங்கள் ஒன்றுகூடி திருமண வைபவம் கோலாகலமாக நடைபெற்றது.

எந்த விழாவிலும் குறைந்த நேரமே இருக்கும் கமல்ஹாசன், அந்த விழாவிற்கு மட்டும் அதிக நேரம் செலவிட்டது ஏன் என விசாரிக்கையில், கமல்ஹாசனின் சொந்த நிறுவனமான ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கும் விக்ரம் படத்திற்கு அன்புச்செழியன் தான் பைனான்ஸ் உதவி செய்துள்ளாராம். மேலும், விக்ரம் படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை அவர்தான் பெற்றுள்ளாராம்.

இதையும் படியுங்களேன் – கடைசி நேரத்தில் விஜயின் காலை வாரிய நெருங்கிய நபர்.! பல கோடிகள் போனதுதான் மிச்சம்.!

kamal haasan

அதேபோல ராஜ்கமல் நிறுவனத்தின் அடுத்தடுத்த படங்களுக்கும் அவரது உதவி தேவைப்படுமாம். அடுத்ததாக சிவகார்த்திகேயனை வைத்து புதிய படம் தயாரிக்க உள்ளார் கமல்ஹாசன் என்பது குறிப்பிடத்தக்கது.

இதன் காரணமாகத்தான் கமல்ஹாசன் நீண்ட நேரம் அன்புச்செழியன் வீட்டு விசேஷத்தில் கலந்து கொண்டார் என்று தமிழ் சினிமாவில் சிலர் கிசுகிசுத்து வருகின்றனர்.  உண்மையில் அதற்காகத்தான் இருந்தாரா அல்லது அன்புச்செழியன் மீதான அன்பு காரணமாக இருந்தாரா என்பது அவர்களுக்கு மட்டுமே தெரிந்த ரகசியம்.

google news
Continue Reading

More in Cinema News

To Top