Cinema History

இது வண்டிக்காரன் சொந்த ஊரு மதுரை டியூன்தானே? ரகுமானிடம் நேரடியாகவே கேட்ட வாலி

தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட படங்களுக்கு பிள்ளையார் சுழி போட்ட படம் ஜெண்டில்மேன். முதலில் சரத்குமார் நடிக்க பூஜை போட்ப்படட்து. ஆனால் என்ன் காரனத்தலோ அவ்ர் வில்க் அர்ஜூனுக்கு அடித்தது அதிர்ஷ்டம். இயக்குனர் ஷங்கர் இய்க்கிய் முத்ல் படமான இது மிகப்பெரிய வெற்றியை பெற்றது. பிரமாண்டத்திற்கு பெயர்போன தயரிப்பாளர் கே.டி.குஞ்சுமோன் இப்படத்தை தயாரித்தார்.

ஜெண்டில்மேன் படத்தின் வெற்ரியில் பிரமாண்டம், கதை என பல விசயங்கள் இருந்தாலும் ஏ.ஆர்.ரகுமானின் பாடல்களுக்கு பெரிய பங்கு உண்டு. படத்தில் அனைத்து பாடல்களும் பெரிய ஹிட் ஆனது. குறிப்பாக சிக்குபுக்கு சிக்குபுக்கு ரயிலே இன்றுவரை ஆட்டம் போடவைக்கும் பாடலாகும். அந்த பாடல் கம்போஸிங்கில் நடந்த சுவாரஸ்யமான விசயங்களை இயக்குனர் ஏ. வெஙகடேஷ் யூடியூப் சேனல் ஒன்றில் கூறியிருந்தர்.

தமிழ் சினிமாவில் முன்னணி கமர்ஷியல் இயக்குநர்களில் ஒருவராக இருந்தவர் ஏ.வெங்கடேஷ். சரத்குமார் நடித்த ‘மகாபிரபு’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான இவர், தொடர்ந்து விஜய்யின் ‘பகவதி’, சிம்புவின் ‘தம்’, ‘குத்து’, மற்றும் ‘ஏய்’, ‘சாணக்கியா’, ‘வாத்தியார்’, ‘சண்டமாருதம்’ என பல வெற்றிப் படங்களைக் கொடுத்துள்ளார். பல படங்களில் வில்லனாகவும், குணச்சித்திர நடிகராகவும் தனது நடித்து வருகிறார். இவர் துவக்கத்தில் ஷங்கரின் ‘ஜென்டில்மேன்’ திரைப்படத்தில் இணை இயக்குநராகப் பணியாற்றியுள்ளார். அந்தப் படப்பிடிப்பின் போது நடந்த ஒரு மறக்க முடியாத சம்பவத்தைத்தான் அவர் தற்போது நினைவுகூர்ந்துள்ளார்.

இயக்குனர் ஏ. வெஙகடேஷ் கூறியபோது, சிக்கு புக்கு பாடலுக்கான டியூனை ஏ.ஆர். ரஹ்மான் கம்போஸ் செய்து முடித்ததும், அதற்கான வரிகளை எழுதுவதற்காகக் கவிஞர் வாலிக்கு அந்த டியூன் அனுப்பி வைக்கப்பட்டது. வாலியும் தனது பாணியில் நான்கு விதமான பாடல் வரிகளை எழுதி ரஹ்மானுக்கு அனுப்பி வைத்துள்ளார். ஆனால், வாலி எழுதி அனுப்பிய எந்த வரியும் ரஹ்மானுக்கு முழுமையான திருப்தியைத் தரவில்லை. பாடல் வரிகள் இன்னும் பெட்டராக, வித்யாசமாக வேண்டும் என்று கூறி, அந்த வரிகளை மீண்டும் வாலிக்கே திருப்பி அனுப்பி வைத்துள்ளார் ரஹ்மான்.

தொடர்ந்து தான் எழுதிய வரிகள் நிராகரிக்கப்பட்டதால் நேரடியாகவே ஏ.ஆர். ரஹ்மானின் ஸ்டூடியோவிற்கே வந்துவிட்டார் வாலி. உங்களுக்கு என்ன மாதிரி வரிகள் வேண்டும்? என்று வாலி கேட்க, டியூனுக்கு ஏற்றவாறு கொஞ்சம் வித்தியாசமாக வேண்டும் என்று ரஹ்மான் பதிலளித்துள்ளார்.

இதைக் கேட்டு வாலி, உங்களுடைய பாடல் டியூனில் ஒன்றும் பெரிய வித்தியாசம் இல்லையே! என்று கூறியுள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த ரஹ்மான் “ஏன்?” என்று கேட்க, நீங்கள் போட்டிருக்கும் இந்த டியூன், வண்டிக்காரன் சொந்த ஊரு மதுரை என்ற படலின் டியூன்தானே என்று வாலி கூறியுள்ளார். வாலி சார் அப்படிச் சொன்னதும், ஸ்டூடியோவில் இருந்த எங்களுக்கு என்ன பேசுவதென்றே தெரியவில்லை. அந்தச் சூழ்நிலையில் நாங்கள் அனைவரும் அப்படியே முழித்துக் கொண்டு நின்றோம்,” என்றுஅந்தப் பழைய நினைவுகளை ஏ.வெங்கடேஷ் கூறினார்.

பின்னர் அந்த பாடல் வாலி எழுதி மிகப்பெரிய ஹிட் ஆனது நாம் அறிந்ததே.

Sai Vikas

சாய் விகாஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 15 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் அசெய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர் மின் அஞ்சல் முகவரி cinereportrs@gmail.com

Recent Posts

மீண்டும் சீறும் தம்பி : கில்லி,படையப்பா வரிசையில் வசூலில் சாதனை படைக்குமா?

தமிழ் சினிமாவில் தற்போது ரீ-ரிலீஸ் ஃபீவர் உச்சத்தில் இருக்கிறது. பல உச்ச நடிகர்களின் படங்கள் ரீ ரிலீ ஸ் செய்யப்பட்டு…

24 minutes ago

நாளை மோதும் 4 முக்கிய படங்கள்

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வெள்ளிகிழமை என்றாலே படு கொண்டாட்டம் ஆகிவிடுவார்கள். காரணம் அப்போதிலிருந்தே வெள்ளிகிழமை அன்றுதான் புதிய படங்கள் வெளியாகும்.…

54 minutes ago

குடைச்சல் கொடுக்கும் அனிருத்!.. சாய் அபயங்கரிடம் பலரும் போக இதுதான் காரணமா?…

கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமாவில் பெரிய நடிகரின் படங்களுக்கு அனிருத்தே இசையமைத்து வருகிறார். ஏ.ஆர் ரஹ்மானிடம் சென்றவர்கள் கூட…

2 hours ago

தூதுவிட்ட சிவகார்த்திகேயன்!.. No சொன்ன அஸ்வத் மாரிமுத்து!.. பார்ட்டி செம உஷார்!…

ஓ மை கடவுளே திரைப்படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து. முதல் படமே சூப்பர் ஹிட். அதன்பின்…

2 hours ago

ஆமாயா நான் திமிரு பிடிச்சவன்தான்!.. டென்ஷன் ஆன அஜித் தம்பி அனில் குமார்!…

நடிகர் அஜித் குமாருக்கு அனுப்குமார் என்கிற அண்ணனும், அனில் குமார் என்கிற தம்பியும் இருக்கிறார்கள்.. இதில் அண்ணன் அனுப் குமார்…

9 hours ago

கலைஞர் குடும்பத்தை பார்த்து அரசியலுக்கு வர ஆசைப்பட்ட விஜய்!.. பிடி செல்வகுமார் ஓபன்..

நடிகர் விஜய் இப்போது அரசியல்வாதியாக மாறியிருக்கிறார். அவரின் தமிழக வெற்றிக் கழகம் விரைவில் சட்டமன்ற தேர்தலில் சந்திக்கப்போகிறது. அரசியல்வாதியாக விஜய்…

12 hours ago